சென்னை,ஜூலை 14- தமிழக அரசின் கல்விக்கொள் கையை ஆளுநர் ரவி ஆதரிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கேட்டுக் கொண்டுள்ளார். சமீப காலமாக ஆளுநர் ரவி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு வக்காலத்து வாங்கும் வகையில் பேசி வருகிறார். மேலும் சனாதன கருத்துக்களை நியாயப்படுத்தியும் பேசி வருகிறார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் வியாழனன்று (ஜூலை 14) செய்தி யாளர்களிடம் பொன்முடி கூறியதா வது:- ஒன்றிய அரசு கொண்டு வந் துள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி கொள்கையே உள்ளது. ஆங்கிலம் மற்றும் மாநில மொழியுடன் இந்தி மொழி யையும் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ கத்தில் அண்ணா காலத்தில் இருந்தே இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசு உருவாக்கி உள்ள புதிய கல்வி கொள்கையிலும் இதுவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆளுநர், தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையை ஆதரிக்க வேண்டும். அவரது கருத்துக்கள் ஏதும் இருந்தாலும் சொல்ல வேண்டும். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது மாணவர்களின் நலனை பாதிக்கும். இருப்பினும் தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளி யான பிறகே கல்லூரிகளில் முத லாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசியல் அமைப்பு பற்றி தெரியாமல் பா.ஜனதா தலைவர் அண்ணா மலை, ஆளுநர் பற்றி கருத்து தெரி வித்து உள்ளார். இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.