states

தென்னை நார் தொழில் நிறுவனங்கள்

சென்னை, ஜூலை 28- காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங் களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டின் தென்னை சார்  தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி யிலும் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, ‘தமிழ் நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவ னம்’ என்ற நிறுவனத்தை துவக்கி யுள்ளது.  இதன் மூலம் மதிப்புக் காட்டப்பட் டுள்ள பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் உள்ளூர் மற்றும்  ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கவும் பல்வேறு முன்னெடுப் புகளை மேற்கொண்டுள்ளது. இதனால், நமது மாநிலத்தில் உள்ள  தென்னை விவசாயிகள் பொருளா தாரம் மேம்படும். சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை நார் மற்றும் காயர் பித் உள்ளிட்ட தென்னை சார்  தொழில் நிறுவனங்கள் நமது மாநிலத்தில் இயங்கி வருகின்றன. இவை பெருமளவில் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன. அத்துடன், சுமார் 2  லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற  வேலை வாய்ப்புகள் வழங்கி வருகி ன்றன. எனவே, இந்நிறுவனங்களின் கோரிக்கையை மாநில அரசு மிகுந்த கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இந்த கோரிக்கை குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்தா லோசித்து, இப்பொருள் குறித்து விரிவாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இம்முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் அதே சமயம் இந்நிறுவனங்கள் நீடித்து இயங்கவும் வழிவகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்