மதுரை, நவ.2- புதிதாக நியமிக்கப்பட்ட அல்லது பதவி உயர்வு பெற்ற வருவாய்த்துறையில் உள்ள கோட்டாட்சியர்களுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் குறித்து பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த வினோத் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஓராண்டுக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று குற்ற வியல் நடைமுறைச் சட்டப்படி உறுதிமொழிப் பத்திரம் வழங்கினார். இந்நிலையில் கொலை வழக்கில் பல்லடத்தில் வினோத் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் குற்ற வியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கிய உறுதிமொழி பத்திரத்தை ரத்து செய்து, சிறையில் அடைக்க குளித்தலை கோட்டாட்சியர் - நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வினோத், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி முரளிசங்கர் முன்பு புதனன்று நடைபெற்றது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சமீபத்தில் வருவாய் கோட்ட அதிகாரியாக பதவி உயர்வு பெற்றதாக தெரிவித்தார். அவர் இதற்கு முன் அத்தகைய விசாரணையை நடத்தவில்லை. மிக முக்கியமாக, இந்த நீதிமன்றம் வகுத்து ள்ள கோட்பாடுகள் மற்றும் பிரிவு 122 (1) (b) Cr.P.C இன் கீழ் நடவடிக்கைகளில் நடத்தப்பட வேண்டிய விசாரணை யின் தன்மை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான காலம் மிகவும் சாதாரணமான முறையில் மற்றும் மிக முக்கியமாக, தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கிறது, குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கருத்துகளைப் பற்றி புதிதாக நியமிக்கப்பட்ட அல்லது பதவி உயர்வு பெற்ற வருவாய்த்துறையில் உள்ள கோட்டாட்சியர்களுக்கு, குற்றவியல் நடைமுறை சட்டம் குறித்து பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.