states

நீதிமன்றத்தை கருவியாக பயன்படுத்துவதா? ஓ.பன்னீர் செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை,ஜூலை 11- அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பு முயற்சித்ததாக கடுமையாக கூறியது. அதன் விவரம் வருமாறு: சட்டப்படி பொதுக்குழுவை கூட்ட  உச்ச நீதிமன்றம் (ஜூலை.6) அனுமதி வழங்கி விட்டது. அதற்கு  முரணாக சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பிக்க முடியாது.பொதுக்குழு கூட்டம் சட்ட விதிகளுக் குட்பட்டு நடத்த வில்லை என்றால்,  உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தர வின் பாதுகாவலர் என்ற அடிப்படை யில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலீக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட  கூடாது என்ற கோரிக்கையை தவிர, வேறு எந்த இடைகால நிவாரணமும் ஓ.பி.எஸ் தரப்பில் கோரப்படவில்லை. பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர்  நீதிமன்றம் தயங்கவில்லை. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்த  ஜூன் 23 அறிவிக்கப்பட்டது.எனவே 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட தாகவே கருத முடியும்.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான்  மேலோங்கி இருக்கும். பெரும் பான்மையினரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர் உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற  வகையில் உறுப்பினர்களின் நம்பிக் கையை பெரும் வகையில் பொதுக் குழுவை அணுகுவதை விடுத்து  ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை  நாடுகிறார். நீதிமன்றத்தின் மூலமாக  சாதிக்க முயற்சிக்கிறார். பொதுக்குழு வில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை மனுதாரர் நடலாம். சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது. ஓபிஎஸ் இடைக்கால நியமனத்தை ஏற்க முடி யாது. எனவே மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட் டுள்ளது.