states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மெக்காவில் கடும் வெப்ப அலை: 230 பேர் பலி

இஸ்லாமியர்களின் புனித தலமான சவூதி அரேபியாவின் மெக்காவில் 48 டிகிரி அளவிற்கு வெயில் கொளுத்தி வரு வதால் அங்கு வெப்ப அலை நிலவி வருகிறது.  இதனால் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும்  மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள னர். வெப்ப அழுத்தம் மற்றும் பல்வேறு கார ணங்களால் 230 பேர் பலியாகியுள்ளதாக வும், 2,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்வு!

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 8 உயர்த்தப்  பட்டுள்ளது. இதன்படி, சென்னையில், 19 கிலோ எடைகொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை, ஜூலை 1 முதல் 1,945 ரூபாயாக அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் தற்போதைக்கு உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை பொருத்து இந்தியாவில் எரிவாயு விலை நிர்ணயிக்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

பொது சிவில் சட்டம்: விளக்கம் கேட்கும் நிலைக் குழு!

பொது சிவில் சட்டம் தொடா்பாக, 22-ஆவது சட்ட ஆணையம், கருத்துக்கேட்பு நடத்தி வரும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வரை சுமார் 8.5 லட்சம் கருத்துகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடம் புதிதாக கருத்து கேட்கும் விவகாரம் தொடர்பாக, தங்கள்முன் ஜூலை 3-ஆம்  தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதி களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பு அனுப்பியுள்ளது. 

துஷார் மேத்தாவுக்கு 3-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு!

இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா கடந்த 2018 அக்டோபர் 10 அன்று  நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு இரண்டு முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது 3-ஆவது முறையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஒன்றிய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது. சொலிசிட்டர் ஜெனரல்  துஷார் மேத்தா தவிர, உச்ச நீதிமன்றத்திற்கான 6 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக விக்ரம்ஜித்  பானர்ஜி, கே.எம். நடராஜ், பல்பீர் சிங், எஸ்.வி. ராஜு, என். வெங்கடராமன் மற்றும் ஐஸ்வர்யா பதி ஆகியோருக்கும் இதேபோல 3 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கல்வித் தகுதி: கெஜ்ரிவாலின் சீராய்வு மனு ஏற்பு

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து அதிர்ச்சி  அளித்தது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கெஜ்ரிவால் சீராய்வு மனு தாக்கல்  செய்திருந்தார். இந்நிலையில், கெஜ்ரிவாலின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிரேன் வைஷ்ணவ், குஜராத் பல்கலைக்கழகம், ஒன்றிய அரசு, தலைமைத் தகவல் ஆணையர் மற்றும்  முன்னாள் தலைமை தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கில் ஜூலை 7ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

ஆர்.என். ரவி செய்தது சர்வாதிகாரம்: சுப்ரியா சுலே

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமைச்சரவையில் இருந்து  நீக்கியது சர்வாதிகாரம் என தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்து  உள்ளார். “தமிழ்நாட்டின் ஆளுநர் போல அல்லாமல், பாஜக-வின் ஆளுநர் போல ஆர்.என். ரவி  செயல்பட்டு உள்ளார். இது சர்வாதிகாரம். அரசியல் அமைப்பும், ஜனநாயகமும் எங்கே இருக்கிறது?  தமிழ்நாட்டில் நடந்த இந்த சம்பவம், மற்ற மாநிலங்களிலும் நடைபெறலாம்” என்று சுப்ரியா சுலே சாடியுள்ளார்.

அரசு கல்லூரிகளில்  85 ஆயிரம்  இடங்கள் நிரம்பின

சென்னை,ஜுலை 1- தமிழ்நாட்டிலுள்ள 164 அரசு கலை  அறிவியல் கல்லூரிகளில் மாணவர்  சேர்க்கை முடிந்துள்ளது. இக்கல்லூரி களில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299  இடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு 2 கட்டமாக நடத்தி முடிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 84,899 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 36,626 மாணவர்களும், 48,275 மாணவிகளும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இதுவரையில் சேர்த்துள்ளனர். ஒரு சில கல்லூரிகளில் இன்னும் சில  முக்கிய பாடப்பிரிவுகள் நிரம்பாமல் உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில்  நேரடி மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது. இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. இதற்கிடையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் வகுப்பு கள் தொடங்குகிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை,ஜூலை 1- தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் செயலாளர்கள் பணியிடம் மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  துறை செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். கால்நடைத் துறை செயலாளராக இருந்த கார்த்திக், உயர் கல்வித்துறை செயலாளராகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா, மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு செயலாளராக இருந்த ரீட்டா ஹரீஷ் தாக்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை  செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித் துறை துணை ஆணை யராக இருந்த விசு மகாஜன், மின்சார வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணை யர் ஆனந்த் மோகன், சென்னை மாநக ராட்சி துணை ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். தமிழ்நாடு சாலைத் திட்ட இயக்கு நர் அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு சாலைத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நியமனம்

சென்னை,ஜுலை 1- தமிழ்நாட்டில் கலைஞர் கருணா நிதி நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத்  தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரி கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழ்நாடு பாடநூல் கழக  மேலாண்மை இயக்குநர் இளம்பகவத், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற் கான சிறப்பு அதிகாரியாக நியமிக்க  ப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்கங்களின்  பதிவாளர் சுப்பையன், கலைஞர் நூற்றாண்டு விழாவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கணவர் மூளைச் சாவு: உறுப்புகளை தானமாக வழங்கிய மனைவி!

தருமபுரி,ஜூலை 1- தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். புதனன்று (ஜூன் 28) நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அவர்  மீது மோதியதில் படுகாயமடைந்தார். பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த னர். செந்தில் குமார் மூளைச்சாவடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது உடல் உறுப்பு களை தானமாக வழங்குவது குறித்து மனைவி விஜயலட்சுமி யிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கணவரின் இருதயம், நுரையீரல்,  கிட்னி, கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்பு களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துப் பாதுகாப்பு பெட்ட கத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோவை  உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.  கண்களை மட்டும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர்.