சென்னை, ஜூன் 11- அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் உயர் சிகிச்சை யளித்து உயிரைக் காத்துள்ளனர். ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் உடல் உச்ச வெப்ப நிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்ட தாகவும் வெயில் தீவிரமாக இருக்கும் போது இணை நோயாளிகளும் முதியவர்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவர்கள் அறி வுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சென்னை காவேரி மருத்து வமனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வ ராஜ் கூறியிருப்பதாவது:- கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக் கிடமான நிலையில் மூதாட்டி ஒருவர் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகி யவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவர் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புக் குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன் ஹீட்டுக்கும் மேல் உயர்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் தலை மையிலான மருத்துவக் குழுவினர்அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெ டுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது. 3 வார சிகிச்சைக்குப் பிறகு அவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். தற்போது அவர் நல முடன் உள்ளார். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடி யாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயி ரிழப்புகளைத் தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.