சென்னை, மார்ச் 18- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனோஜ் பாண்டி யன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சி யின் இடைக்கால பொதுச்செயலா ளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந் தெடுக்கப்பட்டார். பொதுக்குழு முடிவுகளை எதிர்த்து ஒ.பி.எஸ் அணியினர் தாக்கல் செய்த மனு வை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும் என்ப தால் எடப்பாடி அணியினர் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முடிவு செய்து வேட்பு மனுதாக்கலை தொடங்கினர். போட்டியிருந்தால் வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை, தொடங்கி யது. மனு தாக்கல் செய்ய ஞாயிற் றுக்கிழமை கடைசிநாளாகும். மனுக் கள் மீதான பரிசீலனை 20ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21ஆம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. எடப்பாடி போட்டி வேட்புமனு தாக்கல் சனிக் கிழமை தொடங்கிய நிலையில், அக் கட்சியின் இடைக்கால பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட மனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் இதுவரை மனுத் தாக்கல் செய்யாததால் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக ஒ.பி.எஸ் அணி வழக்கு
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் மனு தாக்கல் செய்துள்ளார். விடுமுறை தின மான ஞாயிற்றுக்கிழமை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்பு நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இந்த மனுவை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உள்ளார்.
பிக்பாக்கெட் அடிப்பதுபோல்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் அசம்பா விதம் நடப்பதை தவிர்க்க கூடுதலாக காவலர்கள் குவிக்கப் பட்டனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்த லில் விருப்ப மனு தாக்கல் செய்வதாக இல்லை என்றார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டவிதிகளுக்கு முரணா னது என்றும் அவர் கூறினார். அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிக்பாக்கெட் அடித்து செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது. ஈரோடு இடைத் தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை விட்டுக்கொடுத்தோம். ஈரோடு இடைத்தேர்தல் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரா னது. எங்களது பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இபிஎஸ் அணியிடம் இருந்து அதிமுகவை மீட் டெடுப்பதே எங்களது நோக்கம் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.