பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி உற் பத்தி திட்டத்தின் கீழ், விருதுநகரில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக அத்துறைக்கான இணையமைச்சர் தர்ஷானா ஜர்தோஷ் மக்களவையில் தெரி வித்தார்.
விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக் கோள் தொழில்நுட்பம் தொடர்பாக, தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய விண் வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கூறியுள்ளார்.
சூரியனில் 8 முறை காந்தப் புயல் வீசி யதாக கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரி வித்திருக்கிறது. சூரியகாந்தப் புயல் வீசு வதை கண்காணிக்க கொடைக்கானல் மையத்தில் விஞ்ஞானிகள் குழு அமைக்கப் பட்டுள்ளது.
2017 முதல் 2020 வரை நாட்டில் 50 ஆயி ரத்து 35 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக ஒன்றிய மின்னணு - தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற் கொள்கிறார்.
ஆதர்ஷ் ரயில் நிலைய திட்டத்தின்கீழ் மேம்பாட்டுக்கென ஆயிரத்து 253 ரயில் நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவற்றில் ஆயிரத்து 213 ரயில்நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்கள வையில் தெரிவித்தார்.
ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ. 20,287 கோடியை விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில்திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் வலியுறுத்தினார். ஒன்றிய அரசிடம் இருந்து 38 இனங்களில் நிதி வர வேண்டியுள் ளது. சரக்கு -சேவை வரி வகையில் ரூ.9,842 கோடியும், அரிசி மானிய வகையில் ரூ.2,032 கோடியும் ஒன்றிய அரசு தர வேண்டியுள்ளது.