உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நிலையில், அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என நம்பிக்கை கொண்டிருந்த நிலையில், சங்கரய்யாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 3 முறை எம்எல்ஏ-வாக இருந்த சங்கரய்யா, தனது பொது வாழ்வில் மிகவும் நேர்மையுடனும், சமூக உணர்வுடனும் செயல் பட்டு, மக்கள் நலப்பணியாற்றியதை தமிழக மக்கள் யாரும் மறக்க முடியாது. அவரது சேவைகளை பாராட்டி, தமிழக அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த சங்கரய்யா, இஸ்லா மிய சமுதாய மக்களுடன் நல்ல தோழமை உணர்வுடன் பழகி யதை எப்போதும் மறக்க முடியாது. தியாகி சங்கரய்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தி னர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அனைவ ருக்கும் இரங்கலையும், ஆறுதல்களையும் கூறிக் கொள்கி றேன். கே.எம். காதர் மொகிதீன், தேசிய தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்