காந்தி நகர், நவ. 1 - குஜராத் தொங்குபால விபத்து குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி நகரிலுள்ள தொங்குபாலம் அறுந்து விழுந்து, 47 குழந்தைகள் உட்பட 142 பேர் பலியான துயரச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டாலும், மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முன்னதாக, மச்சூ ஆற்றின் குறுக்கே 1.25 மீட்டர் அகலமும், 235 மீட்டர் நீளமும் கொண்ட 143 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தைப் புனரமைத்து பரா மரிக்கும் பணியை, மோர்பி நகராட்சி நிர்வாகமானது, ‘ஒரேவா குழுமம்’ என்ற தனியார் நிறுவனத்திடம் காண்ட்ராக்ட் விட்டிருந்தது.
அந்த ‘ஒரேவா குழுமம்’, அஜந்தா மேனுபேக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட் மூலம் ரூ. 2 கோடி செலவில் கடந்த 7 மாதங்களாக மோர்பி பாலப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டது. இந்தப் பணிகள் முடி வடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 26 அன்று குஜராத்தி தினத்தன்று மக்க ளின் பயன்பாட்டிற்காக திறந்துவிட்டது. இந்நிலையில்தான், அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமையன்று மோர்பி பாலத்தைக் காண வந்திருந்த மக்கள், திடீரென பாலம் அறுந்து விழுந்து பரிதாப மாக உயிரிழந்தனர். தொங்குபாலம் அறுந்து விழுந்தது குறித்து பல்வேறு விதமான கருத்துக் கள் நிலவுகின்றன. பாலப் புனரமைப்புப் பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட வில்லை. அதில் ஊழல் நடந்துள்ளது. புனரமைப்புப் பணிகளை மோர்பி நகராட்சி நிர்வாகம் ஆய்வுசெய்யவில்லை. ‘ஒரேவா குழுமம்’ தகுதிச் சான்றிதழ் (FC)பெறாமலேயே, தன்னிச்சையாக பாலத்தைத் திறந்துவிட்ட நிலையில், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் முன்னுக்கு வந்துள்ளன. ஆனால், 100 பேரை மட்டுமே தாங்கும் பாலத்தில், திடீரென 400-க்கும் மேற்பட்டோர் குவிந்ததாகவும், அவர்கள் குதித்து விளையாடியதாகவும், இதனால் ஏற்பட்ட பாரத்தைத் தாங்க முடியாமலேயே பாலம் அறுந்து விழுந்து விட்டது என்று ‘ஒரேவா’ தனியார் நிறுவனம் சமாளிக்கிறது.
100 பேரை மட்டுமே பாலம் தாங்கும் என்றால், பின்னர் எதற்காக பணம் பெற்றுக்கொண்டு ஒரேநேரத்தில் 500 பேருக்கும் மேல் டிக்கெட் கொடுத்தார்கள்? என்ற கேள்விக்கு பதிலில்லை. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. புனர மைப்புப் பணியில் ஈடுபட்ட தனியார் நிறு வனத்தைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதனிடையே, இந்த பால விபத்து சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலை மையில் விசாரணை ஆணையம் அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள் ளார். “உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி யின் மேற்பார்வையின் கீழ் ஒரு நீதித்துறை ஆணையம் அமைத்து, மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த உத்தர விட வேண்டும்.
சுற்றுச்சூழல் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பழைய மற்றும் ஆபத்தான பாலங்கள், நினைவுச் சின்னங்களை ஆய்வு மற்றும் இடர் மதிப்பீடு செய்வதற்கான குழுவை மாநில அரசுகள் அமைக்க வேண்டும். நாடு முழு வதும் பொதுக் கட்டமைப்புகளில் பாதுகாப்பை உறுதிசெய்து தணிக்கை நடத்த வேண்டும். இது போன்ற துயர சம்பவங்களை உடனடியாக கவனிக்க, மாநிலங்களில் நிரந்தர பேரிடர் ஆய்வுக் குழுவும் அமைக்கப்படவேண்டும்” என்று திவாரி தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு, செவ்வாயன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் அமர்வின் பார்வைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நவம்பர் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார்.