வழிகாட்டும் சிறப்புமிக்க தீர்ப்பு: இரா.முத்தரசன்
சென்னை, மே 18- பேரறிவாளன் விடுதலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப் பட்ட கு.பேரறிவாளன் உட்பட 7 பேர்களும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ் நாடு ஒருமுகமாக வலியுறுத்தி வந்தது. “சட்டத்தின் ஆட்சி”க்கு காவலனாக இருக்க வேண்டிய ஆளுநர் மாளிகை மாநில அரசின் உரிமைகளை மனிதாபிமானத்தை நிராக ரித்தது. தன் சுயவிருப்பத்தை நிறைவேற்றி கொள்ளும் உணர்வில் செயல்பட்டது. ஆளுநர் மாளிகையின் நீண்டகால தாமதத் தையும், முடிவெடுக்காமல் தட்டிக் கழித்து வந்த பொறுப்பற்ற செயலையும் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
கல்குவாரி விபத்து: ரூ.15 லட்சம் நிவாரணம்
சென்னை, மே 18- திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்க ளுக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- விபத்துப் பகுதியில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்விபத்தில் உயிரிழந்த முருகன் மற்றும் செல்வன் ஆகிய இருவரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர்க ளது குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா ரூ.10 லட்சமும், தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
தருமபுரி, மே 18- தமிழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டு, ராசி மணல், கேரட்டி, நாட்றாம்பாளையம், ஓசூர் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் தொடர் மழை பெய்து வருகிறது. இத னால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. புதனன்று (மே 18) காலை ஒகேனக்க லுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளார். தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் ஒன்றிய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்து அளந்து கண்காணித்து வருகின்ற னர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது
சென்னை, மே 18- தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. கடந்த 14 ஆம் தேதி சவரன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அது மீண்டும் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் தங்கம் விலை புதனன்று (மே18) குறைந்தது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.37 ஆயிரத்து 824க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 728 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.65 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10க்கு விற்றது.