states

காஷ்மீர் பண்டிட்களை மரணத்திற்கு தள்ளி அரசியல் லாபம் தேடும் பாஜக... - க.கனகராஜ்

இந்திய மக்களின் சார்பாக காஷ்மீர் மக்க ளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதம் தான் அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ பிரி வுகள். இதேபோன்று, வேறு சில மாநிலங்களுக் கும் அரசமைப்புச் சட்டம் 371ஆவது பிரிவின்படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், காஷ்மீருக்காக சிறப்பு உரிமை வழங்கும் பிரிவுகளை மட்டும் 2019 ஆகஸ்ட் 5 அன்று பாஜக அரசாங்கம் சட்ட விரோதமாக ரத்து செய்தது. அந்த மாநிலத்தை இரண்டாக சிதைத்தது. மாநில உரிமையை பறித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரின் மக்கள் தொகை 68.9 லட்சம். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு வின் மக்கள் தொகை 53.8 லட்சம். இரண்டை யும் சேர்த்தால் ஒட்டுமொத்த மக்கள் தொகை யில் காஷ்மீரின் பங்கு 56 சதவிகிதம். ஜம்முவின் பங்கு 44 சதவிகிதம். இந்த அடிப்படையில் சட்ட மன்ற தொகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தால் காஷ்மீரில் 51 தொகுதிகளும், ஜம்முவிற்கு 39 தொகுதிகளும் இருந்திருக்க வேண்டும். மாறாக, தற்போது மறுவரையறையின்படி காஷ்மீரு க்கு 47 தொகுதிகளும், ஜம்முவிற்கு 43 தொகுதி களும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தரவாதங்களை திரும்பப் பெறுவதன் மூலம் இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை கட்டியமைக்க பாஜக முயல்கிறது. குறிப்பாக, காஷ்மீர் பண்டிட்டுக ளின் துயரத்தை திரைப்படமாக்கி பாஜகவினர் பணம் குவிக்கிறார்கள். பண்டிட்டுகளின் துய ரத்தை சொல்லி நாடு முழுவதும் வாக்கு சேகரிக் கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்களின் கபட வேஷம் களைந்து காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தி ருக்கிறார்கள்.

சுமார் 15 ஆண்டுகளாக காஷ்மீரில் பண்டிட்டு களுக்கு எதிரான தாக்குதல்கள் பெரும்பாலும் கட்டுக்குள் இருந்தது. குறிப்பாக, ஜம்முவில் தாக்குதல்களே ஏறத்தாழ இல்லை என்று சொல்ல முடியும். ஆனால், கடந்த ஒரு மாத காலத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட சாதாரண மக்கள் குறிவைத்து கொல்லப்பட்டிருக்கிறார் கள். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி  ஒரு பொற்கொல்லர் கொல்லப்பட்டது முதல் தொ டர்ச்சியாக பயங்கரவாதிகளால் மிக மோச மாக இந்த படுகொலைகள் நடந்து கொண்டி ருக்கின்றன. தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் நிகழ்வுகளும் காரணம் இல்லாத சாதாரண பொது மக்களை கொல்வதன் மூலம் பயங்கரவாதிகள் தங்கள் அச்சுறுத்தலை அதிகப்படுத்தியுள்ளார்கள்.  1990 ஆம் ஆண்டு பல பண்டிட் குடும்பங்கள் காஷ்மீரிலிருந்து நாட்டின் வேறு பகுதிகளுக்கு சென்ற போதும் கூட காஷ்மீரிலேயே இருந்த பண்டிட் குடும்பங்கள் தற்போது அங்கிருந்து இடம்பெயர ஆரம்பித்திருக்கிறார்கள். 1990க்கு பின்பு மிக அதிகமான அளவில் மக்கள் இடம் பெயர்வதும், இடம்பெயர முயற்சிப்பதும் இப்போதுதான் அதிகரித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. வெளி மாநிலங்களிலிருந்து காஷ்மீரில் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்ட குடியமர்த்தப்பட்டவர்களில் 70 சதவிகிதம் பேர் காஷ்மீரிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், இதர பகுதியினர் வெளியேற முயற்சித்து கொண் டிருப்பதாகவும், ஆனால் நிர்வாகமும், பாது காப்பு படையினரும் மின் கம்பிகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் மக்களை தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பதாகவும் செய்தி கள் வந்து கொண்டிருக்கின்றன.

2008 ஆம் ஆண்டு 6000 புலம் பெயர்ந்த பண்டிட் டுகளுக்கு மீண்டும் காஷ்மீரில் குடியமர்வதற் காக வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டதோடு, ஆரம்பத்தில் ஏழரை லட்சம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிதி உதவி அறிவிக்கப்பட்டு பின்னர் 25 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப் பட்டது. 2008க்கு பின்பு காஷ்மீர் பண்டிட்கள் குறி வைக்கப்படுவதும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் குறைந்திருந்த நிலையில் தான், தற்போது கொலைகளும், அதன் கார ணமாக இடப்பெயர்வும் அதிகரித்திருக்கிறது. நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி தான் முதன்முதலாக 2019க்கு பின்னர் காஷ்மீருக்கு சென்று ஏராளமான வேலை வாய்ப்புகளையும், நலத்திட்டங்களையும் கொட்டி கொடுத்துவிட்டதாக வழக்கம்போல வாய்ச்சவடால் அடித்துவிட்டு வந்தார். அடுத்த டுத்து, 24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை  உள்துறை அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்த வேண்டிய நிர்பந்தத் திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆண்டு துவங்கிய பிறகு 5ஆவது முறையாக இத்தகைய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அப்பாவி பொது மக்கள் பணியில் இல்லாத பாதுகாப்பு துறை யினர், அரசியல் கட்சியின் நிர்வாகிகள், அரசு பணி யாளர், ஆசிரியர், வங்கி மேலாளர், தொலைக் காட்சி கலைஞர் என்று பலர் கொல்லப்பட்டிருக்கி றார்கள். இந்த ஆண்டு கொல்லப்பட்ட 19 பேரில் 4 பேர் பஞ்சாயத்து உறுப்பினர்கள். தற்போது, பஞ்சாயத்து தலைவராக 2018 ல் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவர் தான் பாதுகாப்பற்ற நிலையில் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஹோட்டல் அரங்கில் முடங்கி கிடப்பதாகவும், பாதுகாப்பிற்காக நியமிக்கப் பட்ட அலுவலர் 2019இல் இட மாற்றம் செய்யப் பட்ட பிறகு எவ்வித பாதுகாப்புமின்றி அடை பட்டுக் கிடப்பதாகவும் கூறியிருக்கிறார். 

பாஜக ஊழியர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்கிறார்கள். எங்கள் துயரங்களை அவர் கள் தங்கள் ஆதாயத்திற்காக பயன்படுத்துகி றார்கள். ஆனால், சாதாரண மக்கள் கொல்லப் படும்போது உரிய நிவாரணமும், கௌரவமான வேலையும் கொடுப்பதற்கு கூட முன்வருவ தில்லை என்று கூறியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தில் காஷ்மீர் பண்டிட் பாதுகாப்பு சங்கம் சார்பில் தங்களை வேறு இடத்திற்கு செல்வதற்கு அரசு தடுப்பதா கவும், சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தியும், தடுப்பு மதில்களில் மின்சார வேலி அமைத்தி ருப்பதாகவும், முகாம்களின் வாயில்களை வெளிப் புறத்திலிருந்து பூட்டி வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். மோடி அரசாங்கம், தொடர்ச்சியாக இஸ்லா மியர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் காஷ்மீருக்கு இழைத்து வரும் அநீதியின் தொடர்ச்சியாகவே இந்த கொலைகள் அதிகப் பட்டிருக்கின்றன. மோடி அரசாங்கம் புள்ளி விப ரங்களை சொல்லி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அனைத்தும் சரியாக இருப்பதாக பீற்றித் திரிவதையே தனது கடமையாக கொண்டிருக்கிறது. தீவிரவாதிகள் சாதாரண மக்களை கொன்று கொண்டே இருக்கிறார்கள். 

பாகிஸ்தான் திட்டமிட்டே காஷ்மீரில் பயங்கர வாதிகளுக்கு உதவுவதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு பலமே நீதி  என்கிற முரட்டுத்தனம் உள்ளூர் மக்களை அந்நி யப்படுத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக ஜனநாய கம் மறுக்கப்பட்டு அநீதிகளை எதிர்கொண்டு துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள மக்களை பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது. பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிர வாதிகளுக்கு பதிலாக தற்போது உள்ளூர் இளை ஞர்களே அரசின் முரட்டுத்தனமான நடவடிக்கை களின் காரணமாக இந்த கொலைகளில் ஈடு பட்டு வருவதாக வரும் செய்திகள் கவலைய ளிக்கக் கூடியது. மோடி அரசாங்கம் மிருக பலத்தின் மூலம் தான் நினைப்பது அனைத்தையும் செய்து விட முடியும் என்பதை, தான் செய்வது அனைத்தை யும் நியாயப்படுத்திவிட முடியும் என்பதையும் முதலில் கைவிட வேண்டும். இல்லையேல், தனது அரசியல் நோக்கத்திற்காக மக்களை பலி கொடுப்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கப் போகிறது. தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான கொலைகள், அவர்கள் நினைப்பது போன்ற பலன்களை கொடுத்து விடாது. ஆனால், ஆயுதங்கள் மூலமாக அமைதியைக் கொண்டு வர முடியும் என்ற மோடி அரசாங்கத்தின் அணுகு முறை மிகவும் ஆபத்தானது. எனவே, ஜம்மு-காஷ்மீரில் அமைதியை உருவாக்க அரசமைப்புச் சட்டத்தை 370 மற்றும் 35ஏ பிரிவு களை மீண்டும் கொண்டு வருவது மிகவும் அவ சியமாகும். சிதைக்கப்பட்ட மாநிலத்தை மீண்டும் ஒன்றாக்குவதும் ஜம்மு-காஷ்மீர் மக்களோடு அரசியல் உரையாடலை நடத்துவதன் மூலம் பரஸ்பரம் உருவாக்கப்பட்டிருக்கும் வெறுப்பை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் அவசி யமாகும். மோடி அரசாங்கம் இதைச் செய்யும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. அவர்களை பொறுத்த மட்டில் பண்டிட்டுகள் கொல்லப்படுவதை விட அவர்கள் கொல்லப்படுவதால் தங்கள் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்கிற எண்ணத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது முடிவு கட்டப்பட வேண்டும். 

கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)