மும்பை மகாராஷ்டிராவில் நவம்பர் 20 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடை பெறுகிறது. இந்த தேர்த லுக்கான வேட்புமனுத்தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் “இந்தியா” கூட்டணி மாநிலத்தில் “மகா விகாஸ் அகாதி (எம்விஏ)” என்ற பெயரில் களமிறங்குகிறது. இந்த எம்விஏ கூட்டணிக்கான தொகுதி பங்கீடு 90% அளவில் நிறைவடைந்து விட்டது. இதுதொடர்பாக சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் புதனன்று இரவு செய்தி யாளர்கள் சந்திப்பில் வெளியிட்ட அறிவிப்பில்,”காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) ஆகிய 3 கட்சிகளும் முதற் கட்டப் பேச்சுவார்த்தை முடிவில் தலா 85 தொகுதிகளில் (மொத்தம் - 255 தொகுதிகளில்) போட்டியிட முடிவு செய்துள்ளோம். மீதமுள்ள 33 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு 18 தொகுதிகள் ஒதுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரு கிறது. உதிரியாக உள்ள 15 தொகு திகளுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) கட்சிகள் இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தையின் போது முடிவு எடுக் கப்படும்” என அவர் கூறினார். மக்கள் வெள்ளத்தில் சிபிஎம் வேட்பாளர் இந்நிலையில், நாசிக் மாவட்டத் தில் உள்ள கல்வான் சட்டமன்ற தொகுதி (எஸ்டி) வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஜே.பி.காவிட் புத னன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பழங்குடியினர் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஜே.பி.காவிட், கல்வான் தொகுதியில் மிகவும் பிரபலமா னவர். அதனால் பழங்குடியினர், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள், சிபிஎம் மற்றும் எம்விஏ கூட்டணிக் கட்சி ஊழி யர்கள் என பல்லாயிரக்கணக்கா னோர் வேட்புமனு தாக்கல் நிகழ்வு க்கு பேரணியாய் திரண்டு வந்து ஜே.பி.காவிட்-க்கு ஆதரவு அளித்தனர். ஒன்று திரண்ட எம்விஏ கட்சித் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, மகா ராஷ்டிரா சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சுனில் மாலுசரே, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் மாவட்ட தலைவ ரும், திந்தோரி மக்களவை எம்.பி.,யுமான பாஸ்கர் பாகரே, காங்கி ரஸ் மாவட்ட தலைவர் ஷிரிஷ் கோட்வால், சிவசேனா (உத்தவ்) மாவட்டத் தலைவர் ஜெயந்த் டிண்டே உள்ளிட்ட எம்விஏ கட்சித் தலைவர்கள் திறந்த வாகனத்தில் சிபிஎம் வேட்பாளர் ஜே.பி.காவிட்டை அழைத்து வந்தனர். இதே போல சிபிஎம் தற்போ தைய எம்எல்ஏ வினோத் நிகோல் பால்கர் மாவட்டத்தின் தஹானு வில் அக்., 28 அன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். இன்று தெரியும் எம்விஏ கூட்டணியில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக் கப்படும் இடங்கள் தொடர்பாக தொடர் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. வெள்ளியன்று மாலை எம்விஏ கூட்டணிக் கட்சிக ளின் தொகுதி உடன்பாடு நிறை வடைந்து விடும் என எதிர்பார்க்கப் படுகிறது. தொகுதி பங்கீடு அறி விப்புக்கு வலுவூட்டும் விதமாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே,”எம்விஏ கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி அறிவிப்பு வெள்ளியன்று வெளியிடப்படும்” என அறிவித்தார்.