states

img

சென்னையில் ஜவுளி நகரம் அமைக்க அரசு ஆய்வு

சென்னை, ஏப்.29- சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருகிறது என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நடைபெற்ற தமது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பிறகு  பதிலளித்து அமைச்சர் பேசியது வருமாறு:- கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கு நெசவாளர்கள் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ரகங்களில் காலத்திற்கேற்ற வடிவமைப்பு மேம்பாடு தேவைப்படுகிறது. இதற்காக சென்னை மற்றும் பெங்களூரில் அமைந்துள்ள தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து வருடத்திற்கு 500 புதிய வடிவமைப்புகள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும்  பட்டு ரகங்களுக்கும் தேவை யான அசல் சரிகை பெரும்பகுதி காஞ்சி புரத்தில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலை யில் உற்பத்தி செய்யப்படுகிறது.

எனவே இதன் வுட் கட்டமைப்புகள் 2.50 கோடியில் புனரமைப்பு செய்து உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் கைத்தறி ரகங்களில் உள்ள ஜரிகை, பட்டு, பருத்தி, நெசவு முறை, சாயமிடும் முறை ஆகிய இனங்களை தரப்படுத்தி கலாச்சாரப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு கைத்தறி என்ற குறியீடு வழங்கப்படும். நவீன தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய வடிவமைப்பு நிலையம் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது ஃபேஷன் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உலக அளவில் ஜவுளி மற்றும் ஃபேஷன் நிறுவனங்களைக் ஒருங்கிணைக்கும் சர்வதேச  தளமாக செயல்படும். இதற்காக  சென்னையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளா கத்தில் ரூபாய் 10 கோடி செலவில் பொது மற்றும் தனியார்  கூட்டு நிறுவனமாக இந்த வடிவமைப்பு நிலையம் உருவாக்கப்படும்.

ஒரே இடத்தில் பல்வேறு மாநில சேலைகள்

காஞ்சிபுரம் பட்டு சேலை கள், திருபுவனம் பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு, கோவை கோரா காட்டன் சேலைகள், ஈரோடு திரைச்சீலைகள். பிற மாநிலங்களின் முக்கிய கைத்தறி வகைகளான மைசூர் பட்டு, பனாரஸ் பட்டு, காஷ்மீரீஸ் ஸ்டோல்ஸ், போச்சம்பள்ளி சேலைகள், பெங்கால் காட்டன் சேலைகள், சந்தேரி சேலைகள், ஜெய்ப்பூர் சேலைகள், ஜம்தனி காட்டன் சேலைகள் ஆகியவை ஒரே கூரையின் கீழ் கிடைக்க ஏற்பாடு செய்யப் படும்.  இதற்காக, தமிழ்நாட்டின் முக்கிய கைத்தறி தயாரிப்புகளின் விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில், உண்மையான கைத்தறிகளுக்கான பிரத்யேக சந்தை பிரிவை உருவாக்கும் “ஹேண்ட்லூம்ஸ் ஆப்  இந்தியா” என்ற பிரத்தியோக கைத்தறி விற்பனை  அங்காடி 10 கோடி ரூபாயில் நிறுவப் படும். ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு வலுவான  இடத்தை கொண்டிருந்தாலும், ஜவுளித் துறையின் அனைத்து பிரிவுகளையும் ஒருங் கிணைந்த ஒரு பெரிய அளவிலான சந்தை இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு  ஒருங்கிணைந்த ஜவுளி சந்தை தொடர்பு வசதியை ஏற்படுத்தித்தர சென்னையில் ஜவுளி நகரம் ஒன்று அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் காந்தி தெரி வித்தார்.