குரூப் 2 தேர்வு: 1.83 லட்சம் பேர் எழுதவில்லை!
தமிழ்நாடு அரசின் குரூப் 2, 2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 529 இடங்களை நிரப்பு வதற்கான முதல்நிலைத் தேர்வு சனிக்கிழமையன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 117 மையங்களில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.30 மணி வரை நடை பெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக, 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்திருந்தனர். இந்நிலையில் அவர்களில் 9 லட்சத்து 94 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்ற னர் என்றும், 1 லட்சத்து 83 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை 3 நாட்களில் ரூ.642 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சனிக்கிழமையன்று பவுனுக்கு ரூ. 192 அதி கரித்தது. இதன்மூலம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் 624 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த மே 19 அன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 128 விலை அதிகரித்து, பவுன் ரூ. 38 ஆயிரத்து 040-க்கு விற்கப்பட்டது. மே 20 அன்று மேலும் ரூ. 304 அதிகரித்து, பவுன் 38 ஆயிரத்து 344 ரூபாய் ஆனது. இந்நிலையில், சனிக்கிழமையன்றும் ரூ. 192 விலை அதி கரிக்கவே, பவுன் ரூ. 38 ஆயிரத்து 536 ஆக உயர்ந்தது. கிராம் ரூ. 4 ஆயிரத்து 817-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வரலாற்றுப் பேராசிரியரை கைது செய்த தில்லி போலீஸ்
வாரணாசியில் உள்ள சியான்வாபி மசூதியில், சிவலிங்கம் இருப்பதாக பாஜக-வினர் கிளப்பி விட்ட விவகாரத்தை, பேராசிரியர் ரத்தன் லால் சமூகவலைதளத்தில் கண்டனம் செய்திருந்தார். வரலாற்றுப் பேராசிரியர் என்ற வகையில் சில கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார். இதற்காக பேராசிரியர் ரத்தன்லால் சிவலிங்கத்தை அவதூறு செய்து விட்டார் என்று கூறி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி சைபர் கிரைம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இருவேறு குழுக்கள் இடையே மோதலை தூண்டிவிட்டதாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153ஏ, 295ஏ ஆகிய பிரிவுகள் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தீ விபத்து!
தில்லியில் பல இடங்களில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், சனிக்கிழமையன்று மதியம் கட்டுமானப் பணி நடைபெறும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள் ளது. நாடாளுமன்ற கட்டடத்தில் தீப்பிடித்ததை அறிந்ததும் அங்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. ஆனால் சிறிய அளவிலான விபத்து என்பதால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் உள்ள தீயணைப்பு ஊழியர்களே தீயை அணைத்து விட்டனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தென்மேற்குப் பருவமழை நாளை துவங்குகிறது!
சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27-ஆம் தேதிக்கு பதில் 23-ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி முதலில் அந்தமான் தீவு களில்தான் தென்படும். அங்கு ஏற்கெனவே மழை துவங்கி விட்டது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவமழையையொட்டி தமிழகத்தின் தென்மாவட்டங்கள் அதிக மழை வாய்ப்பைப் பெறும். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் கொட்டும்.
விலைவாசி உயர்வால் நடுத்தரக் குடும்பங்கள் கதறல்!
“பழம், காய்கறி, பால் வாங்குவதைக் குறைத்து விட்டோம். மிக முக்கியமான விசேஷம் தவிர புதுத்துணி வாங்குவதில்லை. வெளியூர் செல்வதையும், வெளியில் உண்பதையும் நிறுத்தி விட்டோம். சிஎன்ஜி காரைப் பயன்படுத்துவது கட்டுப்படியாகவில்லை. இன்று என்ன சமைப்பது என்பதே பெரிய பிரச்சனையாகி விட்டது. ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போடுகிறோம், ஆனால் மூன்றாம் வாரத்திலேயே மூச்சுத் திணறுகிறது” என்பதுதான் நடுத்தரக் குடும்பத் தம்பதியின் புலம்ப லாக உள்ளது. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் நிலையே இதுவென்றால், ஏழைக் குடும்பங்களின் நிலை எவ்வளவு அவலமாக இருக்கும் என சிந்தியுங்கள்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்து: பலி 4 ஆனது!
ஜம்மு- காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்திற்கு உட்பட்ட கூனி நல்லா அருகே நடைபெற்று வந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்தின் ஒரு பகுதி வியாழனன்று இரவு 10.15-க்கு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய 9 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. பல மணி நேரம் நீடித்த தேடுதலுக்குப் பிறகு, மீட்புக் குழுக்கள் இரண்டு உடல்களை மீட்டு, அடையாளம் காண அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, இடிபாடு களுக்கு சிக்கியிருந்த மற்றொரு உடலும் மீட்கப்பட்டது. இதன்மூலம் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை!
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வரும் ஆகஸ்ட் மாதத்தில் 4ஜி சேவையை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஆர்.கே. புர்வார் அளித்துள்ள பேட்டியில், “ஆகஸ்ட் மாதத்தில் குறுகிய அளவில் 4ஜி சேவை தொடங்கப்படும், ஆண்டு இறுதிக்குள் பரந்த அளவில் 4ஜி சேவை வழங்கப்படும். மேலும் விரைவாக 4ஜி தொழில்நுட்பத்திலிருந்து 5ஜி தொழில்நுட்பத்துக்கு மாறுவோம்” என தெரிவித்துள்ளார்.