சென்னை, நவ.13- காட்சி ஊடக அலுவலகத்தில் பணிபுரி யும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதி யம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் ( டியூஜே ) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் மாநிலத்தலை வர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: 2 வாரங்களுக்கு முன்பு பத்திரிகையா ளர் நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு ஆரம்பமாகியுள்ளது. இதில் முதல்கட்ட மாக, அரசு அங்கீகார அட்டை, பத்திரிகை அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் கணக்கெடுக்கப்படுவார்கள் என்கிற செய்தித்துறையின் அறிவிப்பு, தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மத்தி யில் அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, உடனடி யாக முறையீடு செய்யப்பட்டதை அரசு ஏற்றுக் கொண்டு, ஊடக அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் பத்திரிகையாளர் நலவாரியத்தில் உறுப்பி னராக சேர்ப்பது என்று முடிவெடுத்து நல வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை முழுமையாக வரவேற்ப துடன் முதல்வர், செய்தித் துறை அமைச்சர் மற்றும் நலவாரிய உறுப்பினர்கள், செய்தித் துறை உயர் அதிகாரிகளுக்கு டியூஜே தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளையில், தொலைக்காட்சி யில் பணிபுரியும் செய்தியாளர்கள் ஊதியக் குழு வரம்பிற்குள் வராததால் அவர் களுக்கு ஓய்வூதியம் வழங்க இயல வில்லை என்று நலவாரியம் கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது.
எனவே வரும் சட்டமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், காட்சி ஊடகங்களை ஊதியக்குழு வரம்பிற்குள் கொண்டு வரச் சட்டம் இயற்றுவதுடன், ஊதியக் குழுவில் ஊடகங்களைச் சேர்க்கவும், “பிரஸ் கவுன்சில்” என்கிற அமைப்பை” மீடியா கவுன்சில்”என்று பெயர் மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வரை டியூஜே கேட்டுக்கொள்கி றது. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வூதியக் குழுவால் பரிந்துரைக்கப் பட்டு, செய்தித்துறை தெரிவு பட்டியலில் பெயர் வெளியிடப்பட்ட மணிச்சுடர் பத்திரி கையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மீரான் மைதீன் பெயர் முதலமைச்சர் வழங்கிய 41 பேரில் விடுபட்டுள்ளது. எனவே அவருக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஆவன செய்ய வேண்டும். மேலும் ஓய்வூதியம் பெற்று வந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு, முன்பு இயற்கை எய்திய, பிரபல பத்தி ரிகையாளர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் குழுவில் 30 ஆண்டுகள் பணியாற்றிய ஆர். பெரியசாமியின் துணைவியார் சாந்தி, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தும், ஓராண்டு காலமாக அலைக் கழிக்கப்படு கிறார். இவர் சுதந்திரப் போராட்ட வீராங் கனை மீனாள் கிருஷ்ணசாமியின் மகளா வார். எனவே இவர்கள் பிரச்சனையைச் சிறப்பு நேர்வாகக் கருதி, செய்தித் துறை அமைச்சர் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.