states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. தெலுங்கானாவில் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டிய நிதியை மாநில அரசு வழங்காததால் 60 கிராம தலைவர் (சர்பஞ்ச்கள்) தற்கொலை செய்து கொண்டதாகவும், ரூ.35,000 கோடி மதிப்பி லான நிதியை கே.சந்திர சேகரராவ் தலைமை யிலான அரசு திசை திருப்புவதாகவும் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். 
  2. நாட்டின் மிகவும் மாசு பட்ட நகரங்களின் பட்டி யலில் தில்லி முதலிடத் திலும், ஃபரிதாபாத் (ஹரி யானா) 2ஆவது இடத்தி லும், காசியாபாத் (உ.பி.,)  3ஆவது இடத்திலும் இருப்பதாக என்சிஏபி டிராக்கர் அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.
  3. நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுந ராக இந்திய - அமெரிக்க விண்வெளி துறை நிபுண ரான ஏ.சி.சாரணியா நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவில் ஐஎஸ்ஐ எஸ் தீவிரவாத அமைப்பு டன் தொடர்பில் இருந்த தாக 33 வயதான அப்துல் குரேஷி என்பவரை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர்.
  5. கர்நாடக மாநிலம் மாண்டி யாவில் மாட்டு வண்டி  பந்தயத்தின் போது பார்வையாளர்கள் கூட்டத்தில் மாட்டு வண்டி புகுந்ததில் 42 வயதுமிக்க நபர்  ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  6. பல்வேறு முக்கியமான துறைகளில் இருதரப்பு முதலீடுகளை அதிகப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி முக்கியமான முடிவுகளை தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியாவும், இந்தோனேசியாவும் முடிவெடுத்துள்ளன. வர்த்தக உறவுகளை மேம்படுத்த மருந்துகள், வான்வழிப் போக்குவரத்து, பனை எண்ணெய், நுகர்வுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவற்றை இரு நாடுகளும் அடையாளம் கண்டுள்ளன. 
  7. பெருவில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக  மக்கள் கிளர்ச்சி தொடர்கிறது. புத்தாண்டுக் கொண்டாட்ட ங்களுக்காக இடைவேளை விட்டுப் பின்னர் தொடரும் போராட்டம், பெருவில் உள்ள 18 மாகாணங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி போலுவார்ட்டே வெளியேற வேண்டும், விரைவில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் மற்றும் பெட்ரோ காஸ்டில்லோ விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து மக்கள் போராடி வருகிறார்கள்.
  8. கோவிட் கட்டுப்பாடுகளால் சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது குறைந்திருந்தது. தற்போது  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் 269 சுற்றுலாப் பயணிகள் கொண்ட குழு தாய்லாந்து பாங்காக் விமான நிலையத்தில் இறங்கினர். அவர்களுக்கு தாய்லாந்து சுற்றுலாத்துறை சார்பில் பூக்களும், பரிசுப் பைகளும் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவில் இருந்துதான் தாய்லாந்துக்கு அதிக அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் வருகிறார்கள்.