சேலம், மே 10- நிதி நிறுவனத்தில், அதிக வட்டி தருவதாக பொய்யான விளம் பரம் செய்து பொதுமக்களிடம் பணத்தை பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பாஜக பிரமுகர் ஏற்கனவே கைது செய் யப்பட்டிருந்தார். இந்நிலையில், 6 மாதம் தலைமறைவாக இருந்த அவரது மகனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணி. பாஜக பிரமுகரான இவர், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட்வின் ஐ.டி. டெக்னா லஜி இந்தியா என்ற பெயரில் நிறு வனத்தை நடத்தி வந்தார். இந்நிறு வனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முத லீடு செய்தால் மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் ஒரு வருடத்தில் ரூ. 2.16 லட்சம் வழங்கப்படும் என விளம்பரம் செய்து மக்களின் ஆசையை தூண்டி னர். மேலும், இத்திட்டம் குறித்து பர வலாக சென்றடைய வேண்டும் என திட்டமிட்டு, முதலீடு செய்த வெகு சிலருக்கு அதிக வட்டியுடன் பணத்தை அளித்துள்ளார். இதனை அறிந்து சேலம், திருச்சி, கிருஷ்ண கிரி, வேலூர் உள்ளிட்ட பல மாவட் டங்களில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் பாஜக பிரமுகரின் நிதிநிறு வனம் அறிவித்திருந்த திட்டத்தில் இணைந்தனர். இதனால், கோடிக்க ணக்கான ரூபாய் நிதிநிறுவனத்தில் குவிந்தது.
இதனையடுத்து, பாலசுப்பிர மணி பணம் செலுத்திய உறுப்பி னர்கள் யாருக்கும் பணத்தை வழங் காமல் இழுத்தடித்துள்ளார். தொட ர்ந்து ஒவ்வொருவராக இந்த புகாரை வெளிப்படுத்தினர். பின்னர், சேலத்தை தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலும் அவர் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. வேலூ ரில் ஏமாற்றம் அடைந்த பலர் சேலம் வந்து பாலசுப்பிரமணியை சந்திக்க வந்தபோது, அவர்களை அடியாட் கள் மிரட்டியும், தாக்கியும் உள்ள னர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட வர்கள் சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். முத லீட்டாளர்கள் இவர் மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இது குறித்து விசா ரணை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பாலசுப்ர மணி, அவரது மகன் வினோத் குமார் ஆகியோர் பண மோசடி செய்ததை உறுதிப்படுத்தினர். பின்னர் இவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இத னையறிந்த வினோத்குமார் தலை மறைவானார். போலீசார் பாலசுப்பி ரமணியத்தை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து தலை மறைவாக இருந்த வினோத் குமாரை தேடி வந்த நிலையில், செவ்வாயன்று அழகாபுரம் காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் வினோத்குமாரை கைது செய்த னர். பின்னர், கோவை டான் பிட் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பாஜக பிரமுகரின் நிதிநிறு வனத்தில் பொதுமக்களிடம் நடை பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் மோசடியும், இதனையடுத்து, தந்தை, மகன் இருவரின் கைது நடவடிக்கைகளும் அரசியல் வட்டா ரத்தில் பேசு பொருளாகியுள்ளது.