பெங்களூரு, மே 28- “ஆரியர்கள் என்ன பூர்வகுடி இந்தியர் களா... ஆர்எஸ்எஸ்-காரர்கள் என்ன திரா விடர்களா?” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்த ராமையா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் 10-ஆம் வகுப்புக்கான திருத்தப்பட்ட பாடநூலில் மாவீரர்கள், திப்பு சுல்தான், பகத்சிங், சமூக சீர்திருத்தவாதிகள் நாராயண குரு, தந்தை பெரியார் ஆகியோரின் பாடங்கள் நீக்கப்பட்டு, ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் உரை சேர்க்கப்பட்டதற்கு கண் டனம் தெரிவிக்கும் விதமாகவே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வின் நினைவு தின நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு சித்தராமையா மேலும் பேசியிருப்பதாவது: கர்நாடகத்தில் உள்ள குழந்தைகள் பாடப் புத்தகங்களில் என்ன படிக்க வேண்டும் என்ப தைத் தீர்மானிக்கும் பொறுப்பு ரோஹித் சக்ர தீர்த்தா என்ற ஒற்றை நபருக்கு வழங்கப்பட்டுள் ளது. பகத்சிங்கின் பாடம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கே வாரின் உரை சேர்க்கப்பட்டுள்ளது. பகத்சிங்கை விடத் தேசபக்தி நிறைந்த நபரைச் சொல்ல முடி யுமா? பாஜக வரலாற்றைத் திரிக்க முயல்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சரியான வரலாறு என்ன என்பதை அறிவதே கடினமாகிவிட்டது.
முகலாயர்கள் உள்ளிட்டோர் வெளியிலி ருந்து வந்தவர்கள் என்றால், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் என்ன பூர்வீக இந்தியர்களா? நாங்கள் சில விஷயங்கள் குறித்துப் பேச விரும்பாததால் அமைதியாக இருந்தோம். ஆரியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்த வர்களா என்று இப்போது கேட்கிறோம். அதற்கு பதில் சொல்லுங்கள்? பூர்வகுடிகள் என்பதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்ன திராவிடர்களா? இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்லி யாக வேண்டியதிருக்கிறது. 600 ஆண்டுக்கால முகலாய ஆட்சிக்கு யார் பொறுப்பு? நீங்கள் (இங்கிருந்தவர்கள்) ஒற்றுமையாக இருந்தால் அவர்கள் எப்படி வந்திருப்பார்கள். அவர்க ளுக்கு யார் இடம் கொடுத்தார்கள்? 200 ஆண்டுக்கால ஆங்கிலேயர் ஆட்சிக்கு யார் காரணம்? பாஜகவினர் உண்மை வரலாற்றை மாற்ற முடியாது. இவ்வாறு சித்தராமையா பேசி யுள்ளார். “ஆரியர்கள் வருவதற்கு முன்னர், பண்டைய இந்தியாவில் பரந்து வாழ்ந்த பூர்வகுடியினர், திராவிடர்கள் ஆவார். இவர்கள் நாகர்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்” என்பது டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட வர லாற்று ஆய்வாளர்களின் முடிவாகும். இதனை குறிப்பிட்டே சித்தராமையா, ஆரியர்கள் பூர்வ குடிகளா? ஆர்எஸ்எஸ்-காரர்கள் என்ன திரா விடர்களா? என்ற கேள்வியை முன்வைத்து விமர்சித்துள்ளார்.