states

ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிடுக! பொதுமக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுக!

சென்னை,ஜூன் 10-  இராமேஸ்வரத்தில் கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டு கொடூரமான முறையில் படு கொலை செய்யப்பட்ட ஏழை மீனவப் பெண்மணியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் மற்றும்  அவரது மகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.  இச்சம்பவம்  சம்பந்தமாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் புனைந்துள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன்,  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலி னுக்கு ஜூன் 10 அன்று கடிதம் எழுதி யுள்ளார்.  அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தாலுகா, தங்கச்சி மடம் ஊராட்சி, வடகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலுவின் மனைவி சந்திரா,  கடந்த 24.05.2022 அன்று ஒடிசா மாநி லத்தை சேர்ந்த 6 பேர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, மிகக் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டார். அவருடைய குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டு மென்றும், அவருடைய மகளுக்கு அரசு பணி வழங்க வேண்டுமெனவும் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தங்களுக்கு பத்திரி கைகளின் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தோம் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வரு கிறோம்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த மீனவப் பெண்மணி சந்திரா படு கொலை செய்யப்பட்டுள்ளதால் அக்குடும்பம் நிர்க்கதியாக உள்ளது. எனவே, முதலமைச்சர் கருணை யுடன் பரிசீலித்து கீழ்க்கண்ட கோரிக்கை களை நிறைவேற்றித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். படுகொலை செய்யப்பட்ட மீனவப் பெண்மணி குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் தமிழக அரசு நிதி உதவி வழங்கிட வேண்டும்.    படுகொலை செய்யப்பட்ட சந்திராவின் மகளுக்கு (பிளஸ்-2 படிக்கும்) அரசுப்பணி வழங்க வேண்டும். மீன்வளத்துறை அலு வலகம் இராமேஸ்வரத்திலும், மீன் வளத்துறை துணை இயக்குநர் அலு வலகம் இராமநாதபுரத்திலும் உள்ளது. இங்கு காலியிடமும் உள்ளதாக தெரி கிறது. எனவே, இந்த அலுவலகங்களில் ஏதாவது ஒரு அலுவலகத்தில் அரசுப்பணி வழங்க வேண்டும்.  சந்திராவின் குடும்பத்தினர் தற் போது குடிசை வீட்டில் வாழ்ந்து வரு கின்றனர். இந்த வீட்டை மாற்றி அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான முறை யில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். மேலும், மீனவப் பெண் சந்திரா கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு ஆத்திரமுற்ற கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், ஆத்தி ரமடைந்து செய்வதறியாது குற்றவாளி கள் வேலை செய்து வந்த இறால்  பண்ணையின் குடிசையை தாக்கியுள்ள னர்.  இதனால் கிராம மக்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள னர்.  இந்த இரண்டு வழக்குகளையும் உடனடியாக எவ்வித நிபந்தனை யுமின்றி ரத்து செய்ய வேண்டும் என்று  முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.