சென்னை, ஜூன் 14- தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல தங்களது விசைப் படகுகளில் ஐஸ் ஏற்றுவது, வலைகளை சரி செய்வது, டீசல் நிரப்புவது, உதிரி பாகங்களை பழுது பார்ப்பது, தங்க ளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீரை நிரப்பு வது போன்ற வேலைகளில் மும்முர மாக ஈடுபட்டு வந்தனர். சென்னை காசிமேடு துவங்கி கடலூர், நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியா குமரி வரைக்கும் உள்ள அனைத்து கடற்கரை கிராமங்களிலும் மீனவர்கள் விசை மற்றும் நாட்டு படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.