சென்னை, ஏப். 16- கடற்கரை வாழ் மக்களின் இருப்பிடத்தையும் வாழ்வா தாரத்தையும் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசு, மாநில அரசின் காற் றாலை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடற்கரை 1,076 கி.மீ. நீளம் கொண்டது. இந்த கடல் வளத்தை நம்பி 608 மீனவ கிராமங்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 30 லட்சம் மீனவர்களும், இந்த மீன்பிடி தொழில் சார்ந்து சிறு வியாபாரிகள், மீன் பதப்படுத்துதல் என பல லட்சக் கணக்கானோர் மாநிலம் முழுவதும் உள்ளனர். கடல் மீனை நம்பி வாழும் மீன வர்களை சுற்றுப்புற சூழல் விதி களுக்கு எதிராக முக்கிய நகரங்களில் உள்ள சாக்கடைகள், தொழிற் சாலைகளில் உள்ள கழிவுகளை, பெரும் ஆபத்துக்களை விளை விக்கும் அதிக கதிர்வீச்சு ஆற்றல் உள்ள அணுமின் கழிவுகளை கடலில் கலந்து மீன்வளத்தையும், மீனவர்க ளின் வாழ்க்கையை சீரழித்து வருவதும் ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் தெரிந்தும் தெரியாதது போல் செயல்படுகின்றனர்.
ஒன்றிய அரசின் புதிய திட்டமான தமிழ்நாடு கடலில் குறிப்பாக தனுஷ் கோடி உள்ளிட்ட இராமேஸ்வரம் பகுதி களிலும், நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியா குமாரி வரை கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் சுமார் ரூ. 30,000 கோடி யில் அமைத்து மின் உற்பத்தி செய்ய ஒன்றிய அரசின் எரிசக்தி துறை அமைச் சகத்தின் செயல்முறை திட்டத்தின் படி தமிழ்நாடு அரசு இதனை நடை முறைபடுத்துவதற்குறிய முன் ஏற்பாடு கள் நடைபெறுவது தெரிகிறது. இந்த திட்டம் உடனடியாக நிறை வேற்றுவதன் மூலம் கார்ப்பரேட் நிறுவ னங்களின் நலனுக்காக ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுவதை வன்மை யாகக் கண்டிக்கிறோம்.
கடலில் காற்றாலை திட்டம் கடலின் சுற்றுச் சூழல் மற்றும் நீரோட்டத்தையும் கடு மையாக பாதிக்கும். கடலில் காற்றாலை அமைத்தால் மீனவர்கள் எங்கு சென்று மீன் பிடிப்பது மீனவர்க ளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கக் கூடிய திட்டம். தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை திட்டத்தின் மூலம் மின்சார உற்பத்தி செய்ய மாற்று வழிகள் இருந்தும் அவற்றை கடைபிடிக்காமல், சுற்றுப் புற சூழலுக்கும், தேசிய பசுமை தீர்ப்பா யத்தின் வரைமுறைகளுக்கும் எதி ராக அமைவதும், பாரம்பரிய மீன்பிடி தொழில் செய்யும் தொழில் சார்ந்த வர்களையும் அழித்தொழித்து மாற்று தொழில் செய்ய இயலாத நிலையில், பசி, பட்டினி, பஞ்சத்தில் உயிரை மாய்த்து கொள்ளும் சூழ்நிலையை இரண்டு அரசுகளும் செய்து கொண்டி ருக்கிறது. இப்படிப்பட்ட நாசகரமான திட்டங் களை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அர சும் கைவிட்டு மக்களை பாதிக்காத வகையில் மாற்று இடங்களில் நாட்டு மக்களின் நலன் கருதி தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய பிரத மரையும், தமிழ்நாடு முதலமைச் சரையும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.