அங்கமாலி, ஏப்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் மறைந்த தோழர் எம்.சி.ஜோ சபைன் (73) உடலுக்கு கட்சி தலை வர்கள் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். கண்ணூரில் நடந்த சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட ஜோசபைன், சனியன்று கடுமையான மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். ஞாயிறன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கண்ணூர் ஏகேஜி மருத்துவ மனையில் முதல்வர் பினராயி விஜயன், மாநில செயலாளர் கோடி யேறி பாலகிருஷ்ணன், கே.கே. சைலஜா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அங்கிருந்து அங்கமாலி சிஎஸ்ஏ ஹாலுக்கு ஞாயிறன்று கொண்டுவரப்பட்ட ஜோசபைன் உடலுக்கு அமைச் சர்கள் ஆர்.பிந்து, கே.ராஜன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பென்னி பெஹனன் எம்.பி., கொச்சி மேயர். எம்.அனில்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க தலைவர்கள், நகராட்சி ஊழியர்கள், வணி கர்கள், தொழிலாளர்கள், உள்ளூர் மக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். திங்களன்று நடந்த இறுதி ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஏ.விஜய ராகவன், மத்தியக் குழு உறுப்பி னரும், மாநில மகளிர் ஆணையத் தலைவருமான பி.சதிதேவி, மாதர் சங்கத் தலைவர்கள் சி.எஸ். சுஜாதா, சூசன்கோடி, ஜெ. மெர்சிக்குட்டி அம்மா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முதுகலைப் பட்டதாரியான தோழர் எம். சி.ஜோசபைன் பெண் கள் இயக்கத்திற்கு வழி காட்டிய தலைவராவார். கம்யூனி ஸ்ட் கட்சியில் பணியாற்றுவ தற்கு அறிவிக்கப்படாத தடையின் போது ஜோசபைனின் வார்த்தை களைக் கேட்க மக்கள் திரண்டனர். ஜோசபைன் பெண்களின் பிரச்ச னைகளில் சமரசமற்ற நிலைப் பாட்டை எடுத்த போராளியாவார். மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் (2017-2021). அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், மாநிலத் தலை வராகவும், மகளிர் மேம்பாட்டுக் கழகத் தலைவராகவும், கிரேட்டர் கொச்சி மேம்பாட்டு ஆணை யத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.