தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு உள்ளது. உரம் விலை கடுமை யாக அதிகரித்துள்ளது. 50 கிலோ கொண்ட யூரியா மூடை ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்கப்படு கிறது. தனியார் கடைகளில் உர மூடை வேண்டுமெனில் தேவையில்லாத பொருட்களையும் வாங்க நிர்ப்பந்திக் கின்றனர். தமிழகத்தில் எவ்வளவு ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது என்ற கணக்கெடுப்பு முழுமையாக இல்லாததே உரத்தட்டுப்பாட்டிற்கு காரணம் ஆகும். விவசாயத்தில் களையெடுப்பது, நாற்று நடுவது போன்ற பணிகளில் இயந்திரம் வந்துவிட்டதால் பெண் விவ சாயத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் இயந்திரமாகி வருவதால் பெண் விவ சாயத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மொத்தமாக சென்று கொண்டிருக்கிறது. விவசா யத்தில் இயந்திரங்கள் பயன் படுத்தப்படும் நிலையில் ஆண் தொழி லாளர்களுக்கு இயந்திரங்களை இயக்குவதற்கு உரிய பயிற்சியளிக்க வேண்டும். 100-நாள் வேலைத்திட்டத்தை வசதிபடைத்த மாநிலங்கள், ஏழை மாநிலங்கள் என ஒன்றிய அரசு கூறுபோட முயற்சிக்கிறது. இதற்குக் காரணம் இடதுசாரிகளின் தொடர் வலியுறுத்தலால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி-1-இல் கொண்டு வரப்பட்டது; இதனாலேயே இந்தத் திட்டம் வீணானது, ஒதுக்கப்படும் நிதி தேவையற்றது என்கிறது மோடி அரசு. மாநிலங்களைக் கூறு போடுவதன் மூலம் தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் 100 நாள் வேலையை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். மோடி அரசின் கூறுபோடும் முயற்சியால் சில மாநிலங்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டுமா?