states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. தெருநாய்கள், வெறிநாய் களாக மாறுவதை தடுக்க நோய்வாய்ப்பட்ட நாய் களுக்கு உணவுடன் மருந்து வழங்க நடவ டிக்கை எடுக்க வேண் டும். கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மாண வர்களை கொண்டு 200  வார்டுகளிலும் மருந்து  பொருள் கொடுக்க சென்னை மாநக ராட்சிக்கு மாநில தகவல்  ஆணையம் உத்தரவிட் டுள்ளது.
  2. குஜராத்திகளுக்கு செருப்பை சுமக்கும் பழக்கம் இங்குள்ள (தெலுங்கானா) பாஜக வினருக்கு இருக்கலாம். ஆனால் அந்த பழக்கம் எங்களுக்கு இல்லை என தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் பேசி யுள்ளார்.
  3. தொழில் நுட்பங்களை தவறாக பயன்படுத்தும் பயங்கரவாத குழுக் களால் சர்வதேச அமைதி, பாதுகாப்பு அழிகிறது என ஐநா பயங்கரவாத  ஒழிப்பு சிறப்பு அதிகாரி விளாடிமிர் வோரன் கோவ் தில்லியில் பேசி யுள்ளார்.
  4. குஜராத் மாநிலம் நவ்சாரி யில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவரு மான அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு அப்பகுதி மக் கள் கருப்புக் கொடி காட்டி னர்.
  5. மாநிலங்களுக்கு இடை யேயான முதலீட்டு உறவு களை கருத்தில் கொண்டு மத்தியபிரதேச முதல்வர் சவுகான், ஒடிசா முதல்  வர் பட்நாயக்,  ராஜஸ் தான் முதல்வர் கெலாட் ஆகியோர் மகாராஷ்டிரா வுக்கு வந்தனர். ஆனால் நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முதலீட்டு உறவு களுக்காக எங்கும் செல்ல வில்லை என உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே பேசியுள்ளார்.
  6. சீனா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தகம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான புள்ளிவிபரங்களை சீனா வெளியிட்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 18 விழுக்காடு அளவுக்கு இருதரப்பு வர்த்தகம் உயர்ந்திருக்கிறது. 1049 கோடி அமெரிக்க டாலர்  மதிப்பில் அந்த வர்த்தகம் இருந்தது. 2018 ஆம் ஆண்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டதில் இருந்து இந்த வர்த்தகம் அதிகரித்தே வந்துள்ளது.
  7. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டு வருவதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. ருமேனியா மற்றும் உக்ரைன் எல்லையில் அமெரிக்கப் படைகள் வந்திறங்கியுள்ளன. 4 ஆயிரத்து 700 அமெரிக்கப் படைவீரர்கள் தற்போது உள்ளனர். இது குறித்து ஜனாதிபதி அலுவலக செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “எங்கள் எல்லைகளுக்கு அருகில் அமெரிக்கப் படைகள் இருப்பது, ஆபத்தை அதிகரித்துள்ளது. எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்” என்றார்.
  8. ஜப்பானின் அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டம் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. மூன்று அம்சங்களை முன்னிறுத்தி, அவற்றை 2023 ஆம் ஆண்டுக்கான இலக்குகளாக நிர்ணயித்துள்ளார்கள். உள்ளூர் மக்களுக்கான பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, தொழிலாளர்கள் பணியாற்றுவதற்கான நல்ல சூழல் மற்றும் வலுவான சங்கத்தைக் கட்டுவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த இந்தக் கூட்டம் முடிவெடுத்தது.