சென்னை, நவ. 22 - வாடகை கடைகள் மீதும் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. “கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடைகளின் வாடகைக்கும் 18 சத விகிதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது கொடூர தாக்குதலாகும்” என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டி ருந்தார். தற்போது, தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், வணிகர் செலுத்தும் வாட கைக்கும், வணிக கட்டடங்களுக்கான வாடகை பெறுபவருக்கும் ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு இருப்பது அனை வரும் அறிந்ததே. குறிப்பாக உணவக கட்ட டங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை உணவக வணிகர்கள் 2017-ல் இருந்து செலுத்தி வருகிறார்கள். அதை திரும்பப்பெற நிதியமைச்சருக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இணக்க வரி செலுத்துகின்ற வணிகர்கள் இதுநாள் வரை இந்த நடைமுறையை பின் பற்றி வந்திருக்கிறார்களா என்பது கேள்விக் குறி. வரிவிதிப்பு வரம்பு என்பது ஆண்டு வருமானம் 20 லட்சத்துக்கும் குறை வாக வாடகை வருமானம் உள்ள கட்டட உரிமையாளர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது. அதைப்போலவே 40 லட்சம் வரை விற்று வரவு செய்கின்ற வணி கர்களுக்கும் ஜிஎஸ்டி பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நடைமுறையில் கட்டட உரிமை யாளரும் வணிகம் செய்பவரும் வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. தற்போது 10-10-2024 அன்று முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு எண்.9/2024 அறிவிப்பின்படி சிறு குறு மற்றும் நடுத்தர வணிகர்களும் வாடகை மீதான ஜிஎஸ்டி சேவை வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்கிற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரிச் சட்டங்கள் அறி விக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து 907 சட்டதிருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு வரி விதிப்பிலேயே எண்ணற்ற குளறுபடிகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்ட வாடகை மீதான சேவை வரியை முறையாக மறு ஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலி யுறுத்துகிறது. உரிய தீர்வுகள் எட்டப்படா விடில் இணைப்புச் சங்கங்கள் மற்றும் ஆட்சிமன்ற குழு ஒப்புதல் பெற்று கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.