சென்னை, டிச.27- பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடுமையான செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துள் ளது. இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதி களை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக் குட்பட்ட இறையூர் கிராமத்தில் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டிய லின மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இம் மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரில் சமூக விரோதிகள் மலத்தை கலந்துள்ளதால் அதனை பருகிய சிறுவர், சிறுமிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்த ளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோதிகளின் இந்த நாசகர நடவடிக்கையை யும், தீண்டாமை வன்கொடுமையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அக்கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் பட்டியலின மக்களை வழிபடவும், பொது இடங்களை பயன்படுத்தவும் சாதி ஆதிக்க வாதிகள் மறுத்து தீண்டாமையை கடைப் பிடித்து வந்துள்ளதாகவும், தேநீர் கடை களில் இரட்டைக்குவளை முறை கடைப் பிடிப்பதாகவும் தெரியவருகிறது. இது அப் பட்டமான தீண்டாமை வன்கொடுமையின் உச்சமாகும்.
எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர் களை உடனடியாக கைது செய்து, வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடு மையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டும். அங்கு நிலவும் தீண்டா மைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டிடவும், தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாத வண்ணம் உறுதியான நடவ டிக்கைகள் மேற்கொள்வதோடு, அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் தொட ர்ந்து வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அர சையும், மாவட்ட நிர்வாகத்தையும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.