சென்னை,பிப்.7- கார்ப்பரேட் ஆதரவை தொடர்ந்து கடைபிடித்து கிராமப்புற மக்களின் நலன்களை புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து, விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்க ளும் திரண்டு கிராமங்கள் தோறும் நகலை கொளுத்தும் போராட்டத்தை நடத்த வேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:- கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதார நிலை மைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளா மல் கார்ப்பரேட் ஆதரவு நிலையை முன்னிறுத்தும் வகையில் ஒன்றிய பாஜக அரசின் 2023-2024 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அது குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடா மல், விவசாயிகள் நடத்திய போராட்டங் களை மனதில் வைத்து விவசாயிகளை ஒன்றிய பாஜக அரசு பழிவாங்கியுள்ளது. வேளாண்மை துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 521 கோடியில் இருந்து, நடப்பாண்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 214 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாய இடுப்பொருட்களின் விலை ஏற்றம் மிகக் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், உரம் மானியத்திற்கு ரூ. 54,000 கோடியை குறைத்துள்ளது. பி.எம் கிசான் திட்டத்திற்கு கடந்த ஆண்டு 68 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ள நிலையில், இந்த ஆண்டு வெறும் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
அதேபோல கிராமப்புற வேலையின் மையும், வறுமையும் அதிகரித்துள்ள நிலை யில், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு அற்ப சொற்பமாக கிடைத்து வந்த ஊரக வேலை திட்டத்தின் நிதியையும் கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 89,400 கோடியில் இருந்து, நடப்பாண்டில் 60 ஆயிரம் கோடி யாக குறைத்து கிராமப்புற ஏழைகளை வஞ்சித்துள்ளது. உணவு மானியத்திற்கு கடந் தாண்டு ஒதுக்கப்பட்ட இரண்டு லட்சத்து 87 ஆயிரத்து 194 கோடியிலிருந்து, இந்த ஆண்டு ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 350 கோடியாக குறைத்துள்ளது. மொத்தத்தில் ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளர்களில் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் விரோத பட்ஜெட்டாகவும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணாத பட்ஜெட்டாகவும் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவ தும் பிப்ரவரி 11 அன்று கருப்பு நாளாக கடைப் பிடித்து, பட்ஜெட் நகலை கொளுத்தும் போராட்டத்தை, ஒன்றிய, வட்ட தலை நகரங்களிலும், பிரதான கிராமங்கள் தோறும் நடத்த வேண்டும் என விவசாயிகள் சங்கமும், விவசாய தொழிலாளர் சங்கமும் அறை கூவல் விடுத்துள்ள நிலையில் இந்த போராட்டத்தை தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும், விவசாயிகளையும் - விவசாய தொழிலாளர்களையும் அணி திரட்டி வலுவாக நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.