states

தீக்கதிர் விரைவு செய்திகள்

விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது: பிரதமர் பேச்சு

குஜராத்தில் வியாழனன்று நடைபெற்ற சபர் பால் பண்ணையில் பல்வேறு  திட்டங்களைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், ‘‘2014-க்கு முன் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 40 கோடி லிட்டராக இருந்தது. தற்போது 400  கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமான மும் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடந்த 8 ஆண்டுகளாக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகள் தற்போது பலன் அளித்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, ‘ராஷ்டிரபத்னி’ எனக் கூறியதாக காங்கிரஸ் மக்க ளவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தான் திட்டமிட்டு ஜனாதிபதியை அவ்வாறு குறிப்பிடவில்லை. வாய்தவறி கூறிவிட்டதாக சவுத்ரி விளக்கம் அளித்து  இருந்தார். எனினும், இந்த விளக்கத்தை ஏற்க பாஜக மறுத்துள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலை வர் திரௌபதி முர்மு குறித்த பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜனாதிபதியை நாளைக்குள் சந்திப்பேன்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வை, காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர்  ரஞ்சன் சவுத்ரி, ‘ராஷ்டிரபத்னி’ எனக்கூறி அவமதித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலை யில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் எனது தவறை ஒப்புக்கொள்கிறேன். அதேவேளையில் சோனியா காந்தி குறித்து அவர்கள் (பாஜக) என்ன கூறினார்கள்? சசி தரூர் மனைவி பற்றி என்ன சொன்னார்கள்? ரேணுகா  சவுத்ரி பற்றி என்ன சொன்னார்கள்? நான் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நாளை மறுநாள் சந்திக்க நேரம் கிடைக்கும் என நினைக்கிறேன். இந்த சர்ச்சை குறித்து தனிப்பட்ட முறையில் நான் அவரிடம் பேசுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு உத்தேச விடைகள் இன்று வெளியாகிறது?

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 17 ஆயிரத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வின் உத்தேச விடை கள் வெள்ளிக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி யுள்ளன. உத்தேச விடைகளை neet.nta.nic.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ள லாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

குஜராத் கள்ளச்சாராய பலி 46 ஆக அதிகரிப்பு!

குஜராத் மாநிலம், போதாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் என்று கூறி விற்கப்பட்ட மெத்த னால் கலந்த தண்ணீரைக் குடித்தவர்களில் செவ்வாய்க்கிழமை வரை 33 பேர் பலியாகி இருந்தனர். புதனன்று மேலும் 7 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 40 ஆனது. இந்நிலையில், பலி எண்ணிக்கை வியாழனன்று மேலும் அதிகரித்து 46 ஆகியுள்ளது. இவர்கள் தவிர, மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பாவ்நகர், போதாட், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள  வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

மாலத்தீவு தளபதிக்கு தில்லியில் ராணுவ மரியாதை!

மாலத்தீவு நாட்டு பாதுகாப்புத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லா சாமான், தலை நகர் தில்லிக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். இந்தியா - மாலத்தீவு இடையே  இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த அவர்  இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு வியாழனன்று தில்லியில் இந்திய ராணுவத்தின் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. 1988 முதல்  மாலத்தீவுக்கு தேவையான ராணுவ பயிற்சி மற்றும் உபகரணங்கள் இந்தியா சார்பில் வழங்கப் பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆண்டுகளில் 7.22 லட்சம் பேருக்கு அரசுப் பணி?

ஒன்றிய அரசுத் துறைகளில் கடந்த 8 ஆண்டுகளில் பணி நியமனம் பெற்றவர்களின் எண்  ணிக்கை தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி  ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அதில், ‘கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 22 கோடியே 05 லட்சம் விண்ணப்பதாரர்களிடம் இருந்து அரசுப் பணிக்கான மனுக்கள் பெறப்பட்டன. இதில் 7 லட்சத்து 22 ஆயிரத்து 311 பேருக்கு பல்வேறு துறைகளில் பணி நியமனத்துக்கான பரிந்துரைகளை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் வழங்கின. அதன்படி அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு இருக்கிறது” என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக பிரமுகர் படுகொலை: 2 பேர் கைது!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே உள்ள  நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார் (32). மாவட்ட பாஜக இளைஞர் அணி  செயற்குழு உறுப்பினரான இவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு இருசக்கர வாகனத்தில்  வந்த அமைடயாளம் தெரியாத நபர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பிரவீனின் படு கொலையை வைத்து, அவரது இறுதி ஊர்வலத்தில் பாஜக, விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பி னர் பெரும் வன்முறையில் இறங்கினர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்,  பிரவீன் படுகொலை தொடர்பாக இரண்டு நபர்களை மங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

லாலு பிரசாத்தின் முன்னாள் உதவியாளர் கைது!

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை ஒன்றிய  அரசின் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வே-யில் வேலை வழங்கு வதற்காக பீகாரை சேர்ந்த ஏராளமானோரிடம் இருந்து நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு பிரசாத் மற்றும் குடும்பத்தினர் மீது சிபிஐ ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து இருந்தது. மேலும் லாலு பிரசாத் யாதவிடம் அப்போது நேர்முக உதவியாளராக இருந்த போலா யாதவ் மீதும் வழக்கு  பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் போலா யாதவை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். அத்துடன் இந்த நடைமுறை மூலம் பணி நியமனம் பெற்ற ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

செஸ் ஒலிம்பியாட்: கேரள முதல்வர் வாழ்த்து

சென்னை, ஜூலை 28 - சென்னையில் நடைபெறும் 44வது சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற கேரள முதலமைச்சர் பின ராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச 44வது சதுரங்கப் போட்டியை வியாழனன்று (ஜூலை 28) நேரு உள் விளையாட்டு அரங்கில் பிர தமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த  தொடக்க விழா நிகழ்விற்கு வருகை  தருமாறு பல்வேறு மாநில முதலமைச் சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், அருணாச்சல பிர தேச முதலமைச்சர் பெமா காண்டு, சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம்  சிங் தமாங் ஆகியோர் சதுரங்க போட்டி  சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச் சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்,  ஹரியானா மாநில முதலமைச்சர் மனோ கர் லால் ஆகியோர் சமூக வலைத்தளங் கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள் ளனர்.

சதுரங்க கலாச்சாரம் கொண்டது தமிழகம்: பரத்சிங் சவுகான்

சென்னை, ஜூலை 28 - தமிழ்நாடு சதுரங்க கலாச்சாரம் கொண்ட மாநிலம் என்பதால்தான் ஒலிம் பியாட் போட்டிகளை இங்கு நடத்து வதற்கு திட்டமிட்டோம் என அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு செயலா ளர் பரத்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி கள் மாமல்லபுரத்தில் துவங்கப்பட உள்ள நிலையில், உலக சதுரங்க கூட்ட மைப்பின் தலைவர் ஆர்காடி ஜோகோ விச், அகில இந்திய சதுரங்க கூட்டமைப் பின் தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட் டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச், ஒலிம்பி யாட் வரலாற்றில் அதிக நாடுகள் அதிக அணிகள் பங்கேற்கும் ஒலிம்பி யாட் தொடராக இது உள்ளது. இந்த  ஆண்டு சர்வதேச செஸ் கூட்டமைப்பின் உறுதி மொழியாக ‘செஸ் பெண்கள்’ என்ற உறுதி மொழிக்கு ஏற்ப அதிக நாடுகள் இந்த ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று உள்ளது மகிழ்ச்சி அளிக்கி றது. இதற்காக சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். அகில இந்திய சதுரங்க கூட்ட மைப்பு தலைவர் சஞ்சய் கபூர் குறிப் பிடுகையில், தமிழ்நாட்டில் தற்போது மிகவும் சிறந்த முறையில் இந்த போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். தமிழ் நாடு அரசு, அகில இந்திய செஸ்  கூட்டமைப்பு இணைந்து பணிகளை செய்து முடித்து உள்ளோம். இந்தியா வில் இந்த ஒலிம்பியாட் தொடர் மூலம் புதிய செஸ் புரட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் 8 மாத கர்ப்பிணியாக ஒலிம்பி யாட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய வீராங்கனை ஹரிக்காவை நினைத்து பெருமை கொள்கிறோம். அவர் ஒரு முன்னோடியாக திகழ்கிறார் என்றார். அகில இந்திய சதுரங்க கூட்ட மைப்பு செயலாளர் பரத்சிங், இந்தியா வில் தமிழ்நாடு சதுரங்க கலாச்சாரம் கொண்ட மாநிலம் என்பதால் தான் ஒலிம்பியாட் போட்டிகளை இங்கு நடத்துவதற்கு திட்டமிட்டோம் என த் தெரிவித்தார்.