சென்னை,பிப்.15- தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங் களை ஆதார் எண்ணுடன் இணைக்கு மாறு, அனைத்து மாநில அரசு களுக்கும் ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளது. இதையடுத்து, இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 2022 நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக் கப்பட்டது. இந்த இணைப்புப் பணிக் காக, தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவல கங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பெரும் பாலான மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணு டன் இணைக்கவில்லை. இதை யடுத்து, கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற மின் நுகர் வோரின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை மின் வாரியம் காலக்கெடுவை நீட்டித்தது. அதன்பிறகு, பிப்ரவரி 15-ம் தேதி வரை ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க புதன்கிழமை (பிப்.15) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஈரோட்டில் செய்தி யாளர்களைச் சந்தித்த மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,“மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இதுவரை 2.60 கோடி பேர் இணைத்துள்ளனர். இன்னும் 7 லட்சம் பேர் இணையவில்லை. அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்க வரு கிற 28 வரை கால அவகாசம் வழங் கப்பட்டுள்ளது. இந்த 13 நாட்க ளுக்கு பிறகு மீண்டும் அவகாசம் வழங்கப்பட மாட்டாது”என்றார்.