states

புதிய விமான நிலையம்: ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை, பிப். 9- பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை  தயார் செய்ய ஒப்பந்த காலம் 2ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள் ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைப்ப தற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. சென்னையின் 2ஆவது பெரிய விமான நிலையமாக அமைய உள்ள இந்த பரந்தூர் விமான நிலை யத்திற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு, இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனா புரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடி யிருப்புகளும் அகற்றப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள கிராம மக்கள் 190 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதற்காக ஏற்கனவே சில ஒப்பந்த தாரர்கள் முன்வந்துள்ள நிலையில் கூடுதலாக ஒப்பந்ததாரர்களையும் சேர்ப்பதற்காக கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது. முதலாவதாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் கடந்த 6ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 27ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ஆகியவை குறித்து ஆய்வு செய்யவும் ஒப்பந்தம் கோரப்பட்டது. விமான நிலையத்தின் மூலம் கிடைக் கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை, விமான நிலைய மேம்பாடு தொடர்பாக மாஸ்டர் பிளான், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும்  ஒப்பந்த அறிவிப்பு வெளியானது. கடந்த 15 ஆண்டுகளில் சென்னை யில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி,  2023-24 ஆண்டு முதல் 2069-70 ஆண்டு வரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை பொறுத்து, அது தொடர்பாகவும் அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 27ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.