states

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தவிக்கும் அதிமுக

சென்னை/ஈரோடு, ஜன.20 -  ஈரோடு கிழக்குத் தொகுதியில்  திமுக  தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடு கிறது.  எதிர்த் தரப்பில் அதிமுகவின் எடப்பாடி அணி போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. எனினும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிட முனைப்பு காட்டுகிறது. இருவரும் இரட்டை இலை சின்னத்திற்காக மோதிக் கொண்டிருக்கிறார்கள்.  ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திருமகன்  ஈவெரா ஜனவரி 4 அன்று உடல்நலக்குறை வால் காலமானார்.  இதைத்தொடர்ந்து காலி யானதாக அறிவிக்கப்பட்ட இத்தொகுதிக்கு பிப்ரவரி 27 அன்று இடைத்தேர்தல் நடை பெறும் என தலைமைத் தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொகுதியை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வியாழனன்று மாலை அறிவித்தார்.

அதிமுகவில் குழப்பம்

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் தமாகா போட்டியிட்டது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக எடப்பாடி தரப்பு பேச்சு நடத்தி, அதிமுகவே போட்டியிடும் என்று வாசனையே அறிவிக்கச் செய்தனர். இந்நிலையில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் இத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறது. இருதரப் பினரும் இரட்டை இலை சின்னத்திலேயே வேட்பாளர்களை நிறுத்த விரும்புகிறார்கள் எனத் தெரிகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதற்கு முன்பே இரட்டை இலை சின்னம் குறித்த  முடிவைப் பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.  இதற்காக தலைமைத் தேர்தல் ஆணை யத்தை சந்தித்து இருதரப்பினரும் அழுத்தம்  கொடுக்க தில்லி செல்ல திட்டமிட்டிருப்ப தாகவும் தெரிகிறது. தேர்தல் ஆணையம் யாருக்கும் இரட்டை இலை சின்னம் ஒதுக்க வில்லையென்றால் தனி சின்னத்தில் நிற்கவும் இருதரப்பும் தயாராகி வருவ தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெயக்குமார் கருத்து

இதனிடையே வெள்ளியன்று செய்தி யாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும். இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான ஜி.கே.வாசனின் முடிவு வரவேற்கத்தக்கது. இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது” என்று கூறினார்.

எடப்பாடி மீது  ஓபிஎஸ் தரப்பு பாய்ச்சல்

இதனிடையே செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக நிர்வாகி  புகழேந்தி, “இரட்டை இலை சின்னம் எங் களுக்குத்தான் கிடைக்கும். அது கிடைக் காது என்ற பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடி  பழனிசாமிதான் கட்சியை உடைக்கிறார். அவர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை  ராஜினாமா செய்துவிட்டார். கட்சியின் நலன் கருதி நாங்கள் ஒற்றுமையாக செயல்பட தயா ராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

பாஜக கள்ள மவுனம் 

இதனிடையே கடலூரில் வெள்ளியன்று பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால் எந்தத் தீர்மான மும் நிறைவேற்றப்படவில்லை. எனினும்  இத்தேர்தலில் பாஜக போட்டி யிட வேண்டும் என்ற கருத்து அக்கட்சியினரி டையே உள்ளது; ஏற்கெனவே அதிமுக கூட்ட ணியில் இருப்பதால், இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தால் அக்கூட்டணி பகிரங்கமாக உடையும் நிலை  ஏற்படும்; இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொலைபேசியில் தொடர்பு  கொண்டு பேசியதாக தகவல்கள் கசிந்துள் ளன. இதனிடையே 15 பேர் கொண்ட ஒரு  ரகசிய குழுவை பாஜக மேலிடம் ஈரோட்டி ற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர்கள் தொகுதிக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து கள ஆய்வு செய்வதாகவும், அந்தத்  தகவல்களை பாஜக மேலிடத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை யடுத்தே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. இத்தேர்தலில் தேமுதிக, மக்கள் நீதிமய்யம் ஆகியோரின் நிலைபாடும் இன்னும் வெளியாகவில்லை.