states

ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி: அமைச்சர் தகவல்

சென்னை,டிச.20- தமிழகத்தில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும் அரிசி யுடன், வரும் ஏப்.1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து விநி யோகிக்கப்படும் என்று உணவு துறை  அமைச்சர் அர.சக்கரபாணி தெரி வித்தார். தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியு டன், செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து வழங்குவது தொடர்பாக, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் செயல்படும் அரவை ஆலை  முகவர்களுடன், அமைச்சர் அர.சக்கர பாணி ஆலோசனை நடத்தினார். உணவுத் துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் மற்றும் அரவை ஆலை  முகவர்கள், அதிகாரிகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில்,“அரவை ஆலை முகவர் களின் கோரிக்கைகள் விரைவில்  நிறைவேற்றப்படும். கடந்த 18  மாதங்களாக கொள்முதல் செய்யப் பட்ட நெல் முழுவதுமாக அரைத்து  சாதனை படைக்கப்பட்டுள்ளது” என்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு வழங்குமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 100 கிலோ சாதாரண அரிசியுடன், ஊட்டச்சத்து கலந்த செறிவூட்டப்பட்ட 1 கிலோ அரிசியை கலப்பது குறித்து முகவர் களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது” என்றார். அனைத்து மாவட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற் காக  755 அரவை முகவர்களுக்கு பயிற்சி  அளிக்கப்படுகிறது என்றும் முதல்வர் உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இரும்புச் சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி,  ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் கலந்து விநியோகிக்கப் படும்” என்றும் அவர் கூறினார்.