states

நாடு முழுவதும் இடைத்தரகர்கள், வர்த்தகர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

புதுதில்லி, மே 21- பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக, நாடு முழுவதும் பல நகரங்களில் இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை தேசிய  பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக பணி யாற்றிய சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்கு  சந்தையின் தலைமை பொறுப்பை வகித்தபோது இமயமலை சாமியார் ஒருவரிடம் கலந்தாலோ சித்து தேசியப் பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்கள் ‘ஓபிஜி செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குத் தரகு நிறுவ னத்துக்கு முன்கூட்டியே தெரிவித்து பங்கு சந்தை  தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் செபி தெரிவித்தது.

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி ஆகியவற்றின் அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் முறைகேடாகப் பெருமளவில் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக, ஆனந்த் சுப்பிரமணியனை பிப்ரவரி 25-ஆம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணா வை மார்ச் 6-ஆம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்நிலையில், பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டப் பிரிவு களின் கீழ், வழக்குடன் சம்பந்தப்பட்ட சில பங்குச்சந்தை இடைத்தரகர்கள் மற்றும் வர்த்த கர்கள் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவல கங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமையன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

;