சென்னை, டிச.14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு மாணவர் விடுதி களை தனியார்மயமாக்கும் நடவடிக் கைகளை கைவிடவேண்டும் என்று மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் காசி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. புதிதாக துவக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் தவிர, மற்ற அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தங்கிப்படிக்க வசதியாக விடுதிகள் அமைந்துள்ளன. அண்மையில் பட்டமேற்படிப்பு மாண வர் விடுதிகளை “அரசு-தனியார் கூட்டு முயற்சியில் நடத்துவதற்காக கருத்துக் கேட்பு” நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கிவரும் மருத்துவக்கல்லூரி விடுதிகள், அந்தந்த கல்லூரிகளின் “மாணவர் கவுன்சில்” மூலமாக, எந்த பிரச்சினை யும் இல்லாமல் நடந்தப்படுகின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் குறைந்த செலவில் தன் மருத்துவப்படிப்பைத் தொடர முடிகிறது. மாறாக, ‘அரசு -தனியார்’ கூட்டில் நடத்த ஆரம்பித் தால் கட்டணங்கள் உயர்வது மட்டு மின்றி, ‘மாணவர் கவுன்சில்’ மூலம் ஜனநாயக முறைப்படி நடைபெற்று வரும் விடுதி நிர்வாகம் முழுமையாகத் தனியார் வசம் செல்லும் அபாயம் உள்ளது என்று மருத்துவர் அரங்கம் எச்சரிக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் எந்த வகையிலும் தனியார் மயத்தைப் புகுத்தவேண்டாமென்றும், “கருத்துக் கேட்பு” நடவடிக்கைகளை உடனடியாக கைவிடவேண்டுமென்றும் மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவக்கல்வித் துறையைக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.