சென்னை, மே 6- சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீது விவாதத் தின்போது பதிலளித்து பேசிய அமைச்சர், “கிழக்கு கடற்கரை சாலையில் 100 ஏக்கர் பரப்பில் இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து ஆன்மிகம், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.1.50 கோடி செலவில் தயாரிக் கப்படும். வீரவிளையாட்டு விழா என்ற பெயரில் ஜல்லிக் கட்டு போன்ற பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி செலவில் போட்டிகள் நடத்தப்படும்.