states

தீக்கதிர் விரைவு செய்திகள்

முருங்கைக்காய் விலை உச்சம் தொட்டது

சென்னை,டிச.7- கடும் பனிப்பொழிவு காரணமாக முருங்கை விளைச்சல் குறைந்ததுடன் கோயம்பேடு சந்தைக்கு வரத்தும்  பெருமளவு குறைந்துள்ளது.  தினசரி 10 வாகனங்கள் மூலம் 80 டன் அளவுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக 10 டன்  அளவு முருங்கைக்காய் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ  முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்கப்பட்ட நிலையில் வரத்து குறைவு காரணமாக விலை 2 மடங்காக அதி கரித்து உள்ளது. புதனன்று  மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.150-க்கும், காய்கறி மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு  கிலோ  முருங்கைக்காய் ரூ.200 வரையி லும் விற்கப்படுகிறது. மேலும் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விலை எகிறி உள்ளது.  இந்த விலை உயர்வு பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும் என கருதப்படுகிறது.

கல்வெட்டியல், தொல்லியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, டிச.7- சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2023 - 2024ஆம் ஆண்டிற் கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய  வகுப்பு 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த வகுப்பிற்கான விண்ணப் பத்தை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு கிடையாது. சேர்க்கைக் கட்டணம் 3 ஆயிரம் ரூபாய். சேர்க்கைக் கட்டணத்தை “இயக்கு நர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்”  எனும் பெயரில் வங்கி வரைவோலை யாகவோ அல்லது நிறுவன வங்கிக் கணக்கில் இணையம் வழியாகவோ செலுத்தி, செலுத்தப்பட்டமைக்கான ரசீதை நிறைவு செய்யப்பட்ட விண் ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-22542992, 9500012272 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

கேக் தயாரிக்க  ஆவின் ஆலோசனை 

சென்னை, டிச. 7- தமிழக அரசின் நிறுவனமான ஆவின்  மூலம் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை யில் மட்டும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும்  பிளம் கேக் விற்பனை செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையா கூறுகையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை யொட்டி ஆவின் சார்பில் 5 சுவைகளில் கேக் தயாரிக்கப்பட உள்ளது. இது தவிர பிளம் கேக்கும் தயாரிக்கப்படும். மற்ற நிறுவனங்களை விட தரத்துடன் விலை குறைவாக விற்கப்படும். பொங்கலுக்கு 100 கிராம் நெய் பாக் கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. ஏழை-எளிய மக்கள் பொங்கலை கொண்டாட நெய்யை பயன்படுத்தும் விதமாக அதிகளவில் தயாரிக்கப்பட உள்ளது. தற்போது 100  கிராம் நெய் 10 ஆயிரம் தான் தயாரிக்கப் படுகிறது. சேலத்தில் புதிய ஐஸ்கிரீம் பண்ணை நிறுவப்பட்டு உள்ளது. அதன்  மூலம் தினமும் 6000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

 ஆட்டோ மீது லாரி மோதல் உடல் நசுங்கி 6 பேர் பலி

மதுராந்தகம்,டிச.7- சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 6 பேர் உயிரிழந்தனர்.  சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர் (வயது 70), சசிகுமார் (35), தாமோதரன் (28), ஏழுமலை (65), கோகுல் (33), சேகர் (55). இவர்கள் உள்ளிட்ட மொத்தம் 12 பேர் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திரு வண்ணாமலை கோவிலில் வழிபட சரக்கு ஆட்டோவில் சென்றனர்.  பின்னர் புதனன்று  காலை வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காலை  4.30 மணியளவில் மதுராந்த கம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் இவர்கள் பயணம் செய்த ஆட்டோ   கட்டுப்பாட்டை இழந்து முன்னால்  சென்று கொண்டிருந்த கண்டெய்னர்  லாரியில் மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு  லாரி விபத்தில் சிக்கிய சரக்கு ஆட்டோ பின்னால் மோதியது. இந்த கோர விபத்தில் சரக்கு ஆட்டோ வில் இருந்த சந்திரசேகர், சசிகுமார், தாமோதரன், ஏழுமலை, கோகுல், சேகர் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்த னர். 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த பாலமுருகன் உள்ளிட்ட 6 பேரும் அதே மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.  விபத்தில் பலி யான அனைவரும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் ஆவர். இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அந்த குடும்பங்களுக்கு தலா  ரூ.1லட்சம்  வழங்க உத்தரவிட்டுள் ளார். விபத்தில் காயமுற்று செங்கல்பட்டு அரசு பொது மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 நபர்களுக்கு, சிறப்பு சிகிச்சை  அளிக்கவும் அவர் உத்தர விட்டுள்ளார்.

நிறுவனங்கள் திவால்

டென்மார்க்கில் நெருக்கடி

கோபன்ஹேகன், டிச.7- ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் நெருக்கடியின் ஒரு பகுதியாக டென்மார்க் கில் நிறுவனங்கள் திவாலாவது அதி கரித்து வருகிறது. உக்ரைன்-ரஷ்யா சச்சரவால் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து அந்தத் தடைகளை ஐரோப் பிய நாடுகளும் பின்பற்றின. ரஷ்யாவைக் கட்டுப்படுத்தவே இந்தத் தடைகள் என்று சொல்லிக் கொண்டாலும், ஐரோப்பிய நாடுகள்தான் பெரும்பாலும் பாதிக்கப் பட்டுள்ளன. தடைகளை முன்னெடுத்த அமெரிக்காவுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட வில்லை. தனது இருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை அதிக விலைக்கு விற்பதன் மூலம் அமெரிக்கா லாபத்தையே ஈட்டி வருகிறது. இந்நிலையில், டென்மார்க் நாட்டில் நிறு வனங்கள் திவாலாகி வருகின்றன. நவம்பர் மாதத்தில் மட்டும் 331 நிறுவனங்கள் திவா லாகி விட்டதாக அறிவித்துள்ளன. கடந்த 13 ஆண்டுகளில் இந்த அளவுக்கு எண்ணிக்கை இருந்ததில்லை. கோடைக் காலத்தில் இருந்தே நிலைமை மோசமாகியிருந்தது. விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை கள் அதிகரிப்பு மற்றும் பொருளாதாரத் தின் வருங்காலம் பற்றிய அச்சம் உள்ளிட் டவை கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. திவாலாகும் நிறுவனங்களில் அனைத் துத் துறைகளையும் சார்ந்தவையாக இருந்தாலும் சில்லரை வணிகம் மற்றும் கட்டுமானத்துறை நிறுவனங்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. நவம்பர் மாதத்தில் திவாலான நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கட்டுமானத் துறையைச் சேர்ந்தவையாகும். வரும் மாதங் களில் திவாலாகும் நிறுவனங்களின் எண் ணிக்கை மேலும் அதிகமாகும் என்று டென் மார்க்கின் எஸ்எம்விடென்மார்க் என்ற ஆலோசனை நிறுவனத்தின் வல்லுநர்க ளில் ஒருவரான லுன்ட்க்விஸ்ட் எச்சரிக் கிறார்.

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் 4 பேர் மீது  காரை ஏற்றி கொன்ற ஆசிஷ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு பதிவு

லக்னோ, டிச. 7 - உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில், நான்கு விவசாயிகளை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில், ஒன்றிய உள்துறை இணையமைச் சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் தலை மையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, லக்கிம்பூர் என்ற இடத்தில், கடந்த ஆண்டு அக்டோபரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மோடி அரசு கொண்டுவந்த 3  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரி வித்து, நூற்றுக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய உள் துறை இணையமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி மோதினார். இதில், விவசாயிகள் 4 பேர் பரிதாபமாக உயி ரிழந்தனர். இந்த விவகாரத்தில், அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளி யாக சேர்க்கப்பட்டார். மேலும், 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 14-ஆவது குற்றவாளியான வீரேந்திர சுக்லா தவிர 13 பேரும் சிறையில் உள்ளனர்; இந் நிலையில்தான், முக்கியக் குற்றவாளியான, ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 குற்றவாளிகள் மீது லக்கிம்பூர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘சட்டத்துக்கு புறப்பாக கூடுதல், கொலை, கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் கடுமையான காயங்களை ஏற்படுத்துவது, சதித் திட்டம்’ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் விசாரணை துவங்கும் என கூடுதல் மாவட்ட நீதிபதி சுனில் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.