states

பி.காம் படிப்பில் சேர இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்: உயர்கல்வித்துறை

சென்னை, மே 13- பிகாம் படிப்பில் சேர இடைத் தரகர்களை நம்பி ஏமாறவேண்டாம் என்று மாணவர்களையும் பெற்றோர் களையும் உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்  கடந்த 8ஆம் தேதி வெளியானது. இதில்  முக்கியப் பாடங்களில் 100க்கு 100 மதிப் பெண் பெற்ற மாணவர்களின் எண் ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.  கடந்த ஆண்டு 23,957 பேர் ‘சென்டம்  பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 32,501 பேர் ‘சென்டம் பெற்றி ருப்பது உயர்கல்வி சேர்க்கையில் பல் வேறு மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளது. அதேநேரம், கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 690ஆக குறைந்ததால், பி.இ. படிப்புக்கான கட்-ஆப் மதிப்  பெண் நடப்பாண்டு குறைய வாய்ப் புள்ளது. இதனால் அதிக எண்ணிக் கையில் மாணவர்கள் பி.இ. படிப்பில் சேர வாய்ப்பு உருவாகியுள்ளது. கணக்கு பதிவியல் பாடத்தில் 6,573 பேரும், வணிகவியலில் 5,678 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள் ளனர். இந்த மாணவர்கள் கல்லூரி களில் பி.காம். படிப்பில் சேர்வதற்கு  அலைமோதுகின்றனர்.

ஒரு கல்லூரி யில் 400 பி.காம் இடங்கள் இருந்தால், அதில் சேருவதற்கு சராசரியாக 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது போட்டியின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபல தனியார் கல்லூரி களில் பி.காம். இடங்களைப் பெறுவ தற்கான கட்-ஆப் மதிப்பெண் 99  விழுக்காட்டிற்கு மேலாக இருக்கும்.  இது 100 விழுக்காட்டை தொடவும்  வாய்ப்பு இருப்பதாக கல்வியா ளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது பி.காம். அக்கவுண்டிங் அண்ட் பைனான்ஸ், கார்ப்பரேட் செகரட்டரிஷிப், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், ஹானர்ஸ், ஆடிட்டிங், காஸ்டிங், மேனேஜ் மென்ட்  அக்கவுன்டிங், பிசினஸ் லா, வங்கி  மேலாண்மை, கணினிப் பயன்பாட்டி யல், தகவல் தொழில் நுட்பம், கேப்பிடல் மார்க்கெட் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற  வழிவகுக்கின்றன. கணக்கு துறையில்  தொழில் ரீதியாக வளர விரும்புவோர் தங்களுக்கான அடிப்படைத் தகுதியாக இந்தப் படிப்புகளைக் கருதுவதால் அவற்றில் சேர மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். பி.காம் படிப்பில் சேர மாணவர்க ளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள தால், அதில் சேர்க்கை பெற்றுத் தருவ தாக இடைத்தரகர்கள் சிலர் பெற்றோர் களிடம் பேரம் பேசி வருவதாகவும், பிற கல்லூரிகளில் இடத்தை உறுதி  செய்ய ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம்  வரை கேட்பதாகவும் புகார் எழுந்துள் ளது. இதுபோன்ற நபர்களை நம்பி  பெற்றோர்கள் யாரும் ஏமாற வேண்டாம்  என உயர்கல்வித் துறையும், தனியார் கல்லூரி நிர்வாகங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளன.