2016 முதல் நேரிட்ட உயிரிழப்புகள்
ஆண்டு உயிரிழப்பு
2016 17218
2017 16157
2018 12216
2019 10525
2020 8060
2021 14912
இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் சாலை விபத்து களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு சாலை விபத்து நடைபெறுகிறது. முக்கியமாக 70 சத விகித விபத்துகள் மது அருந்தி வாக னம் ஓட்டுவதாலேயே ஏற்படுகிறது. விபத்து நடப்பதற்கு சூழ்நிலை மட்டுமே காரணம் இல்லை. மனம் மற்றும் உடல்நிலையும் முக்கிய கார ணம். பெரும்பாலான விபத்துக்கு அதி வேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்றவையும் முக்கியக் காரணங்கள். வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவதால் ஏற்படும் கவனச் சிதறல் இன்னொரு முக்கியக் காரணம். விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை 23 மடங்கு அதிகரிக்கிறது செல்போன். எஸ்.எம்.எஸ். வரும் போது அது என்ன என்று அறியும் ஆர்வம் அடுத்த ஐந்து நொடிகளுக்கு நம் கவனத்தை திசைதிருப்புகிறது. விபத்து ஏற்பட இந்த இடைவெளியே போதுமானதாக இருக்கிறது. விபத்தில் பெரும்பாலும் ஆண்கள் தான் சிக்கிக் கொள்கிறார்கள். பெண்க ளுக்கு எப்போதுமே பொறுப்பும், எச்சரிக்கை உணர்வும் இருப்பதால் அவர்கள் அதிகம் விபத்தில் சிக்கு வதில்லை. தான்தான் முன்செல்ல வேண்டும் என்ற வேக உணர்வால் ஆக்ஸிலேட்டரை வேகமாக முறுக்கி முன்னே சென்று விபத்தில் சிக்குகின்ற னர் ஆண்கள். சாலைகளில் வாகனம் ஓட்டும்போது ரேஸ் மனப்பான்மை யை தவிர்க்க வேண்டும். பயணத் தின்போது யார் இடதுபுறம், யார் வலதுபுறம் செல்வது என்பதிலும் கவனம் தேவை.
தமிழகத்தில் 2021-இல் நேரிட்ட 55,713 வாகன விபத்துகளில் 14912 பேர் இறந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 6852 பேர் அதிகமா கும். குறிப்பாக இருசக்கர வாகன விபத்து உயிரிழப்பு என்பது தற்போ தைய மதிப்பீட்டில் 107 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது தெரிய வருகிறது. இருசக்கர வாகன விபத்துகளில் மட்டும் 6223 பேர் இறந்துள்ளனர். லாரிகள் மூலம் ஏற்பட்ட விபத்துகளில் 2467 பேரும், கார்கள், டாக்ஸி விபத்து களால் 2467 பேரும், வேன் மற்றும் சிறிய வகை சரக்கு வாகனங்களால் 1140 பேரும் இறந்துள்ளனர். அதே போல் தேசிய நெடுஞ்சாலை விபத்து களில் 4329 பேரும், மாநில நெடுஞ் சாலை விபத்துகளில் 4929 பேரும் இறந்துள்ளனர் என மாநில அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
கொரோனா கட்டுப்பாடு காலத் தில் நீண்ட நாட்கள் இயக்கப்படாமல் இருந்த வாகனங்களை மீண்டும் இயக்கும்போது விபத்து ஏற்படுவது அதிகரித்துள்ளது. மேலும் கொரோ னா அச்சத்தால் மக்கள் அதிகள வில் சொந்த வாகனங்களை பயன் படுத்தி வருகின்றனர். இதனால் போதிய அளவில் பயிற்சி பெறாம லும், சாலை விதிமுறைகளை பின் பற்றாமல் வாகனங்களை ஒட்டியதா லுமே அதிகளவில் உயிரிழப்பு ஏற் பட்டுள்ளது என்கிறார்கள் போக்கு வரத்துத்துறை அதிகாரிகள்.கடந்த ஐந்து ஆண்டுகளாக சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறைந்து வந்த நிலையில் மீண்டும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் இருசக்கர வாகன விபத்துகளில் 2997 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 2021-இல் 6223 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் சென்றதில் 2410 பேர் இறந்துள்ளனர். 2020-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது மொத்த உயிரிழப்பில் 107 சதவிகிதம் இது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாலை விபத்து கள் மற்றும் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளதற்கான காரணத்தை கண்டறிந்து புதிய திட்டங்க ளை அரசு வகுக்க வேண்டும். குறிப்பாக சாலைகளில் பேருந்து கள், இருசக்கர வாகனங்களுக்கு பிரத்யேக உரிய பாதைகளை வகுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்து செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டக்கூடாது. சாலை விபத்துகளை குறைக்க ஆண்டுதோறும் ஆய்வு செய்து புதிய இலக்கை நிர்ணயித்து செயல் படுத்திட வேண்டும். இதுவே உயிரி ழப்புகளை தடுப்பதற்கு வழிவகை செய்யும்.
- ஐ.வி.நாகராஜன்