சென்னை, ஏப். 7 - பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன் கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக ஆவணங்க ளையும் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத் தில் தெரிவித்துள்ளது. அந்த ஆவணங்கள் எந்த தேதியில் குடியரசு தலைவருக்கு அனுப்பப் பட்டது என தமிழக அரசு விளக்கம் அளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக அதிமுக அமைச்சரவை தீர்மானம் நிறை வேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்த தீர்மானத்தின் மீது நீண்ட நாட்களாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்தார். இதனை எதிர்த்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, முன் கூட்டியே விடுதலை செய்ய நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டதா என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தர விட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் வியா ழனன்று (ஏப்.7) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளன் மட்டுமல்லாமல், 7 பேரின் ஆவணங்களையும் ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தெரி வித்தார். நளினி தரப்பு வழக்கறி ஞர் ராதாகிருஷ்ணன், முன்கூட்டி விடுதலை செய்வது தொடர் பான விவகாரத்தை குடியரசு தலை வருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை என தெரி வித்தார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை குடியரசு தலைவருக்கு எந்த தேதி யில் ஆளுநர், அனுப்பினார் என தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.