முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
சென்னை, ஜூன் 21- கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத் தில் நிர்வாகச் சீர்கேட்டினால் முடங்கிப் போயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறு வனங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்ற வேண்டும். நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: தனிநாயகம் அடிகள் அவர்களா லும், பேரறிஞர் அண்ணா அவர்களா லும் தோற்றுவிக்கப்பட்டு டாக்டர் கலை ஞர் அவர்களால் வளர்த்தெடுக்கப்படம மது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமா கும். தமிழில் உயர் ஆய்வுகளை செய்து கருவி நூல்களை உருவாக்குவதே இந் நிறுவனத்தின் முதன்மையான பணியா கும். இப்பணியினை இந்நிறுவனம் சிறப் பாக செய்து வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிறு வனத்தின் ஆய்வுச் சூழல் முற்றிலும் முடங்கிப் போனது. நிறுவனத்தின் ஆய் விற்கு தொடர்பில்லாத திருக்குறள் காட்சிக் கூடம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் போன்றவற்றை திணித்து ஆய்வு நிறுவனத்தை கண்காட்சிக் கூட மாக மாற்றியதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி முற்றிலும் தடைபட்டுப் போனது.
தற்போது, பல ஆய்வு இருக்கை களை உருவாக்கி முறையற்ற வழியில் அரசு மற்றும் நிறுவனத்தின் லட்சினை யை பயன்படுத்தி சான்றிதழ்கள் வழங்கு வது, திருமூலர் ஆய்வறிக்கையின் மூலம் தமிழகம் முழுவதும் வகுப்பு கள் எதுவும் நடத்தாமல் முறையற்ற வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இப்படி பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தன் பெருமையை இழந்து நிற்கிறது. முறைகேடுகளை விசாரிக்க குழு அமைத்திடுக! தமிழக முதல்வர் இந்நிறுவனத்தை உயர் ஆய்வு நிறுவனமாக மாற்றுவ தற்கும், இதுகாறும் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டறிந்து நட வடிக்கைகளை மேற்கொள்வதற்கும், உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தி அக்குழு அளிக்கும் சிபாரிசுகள் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் சிறப்பாக செயல்பட, இந்நிறு வனத்திற்கு இயக்குநராக மூத்த பேராசி ரியர் ஒருவரையே நியமிப்பது பொருத்த மானதாக இருக்கும். மேலும் நிறுவன வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கை கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை களை நிறைவேற்றித் தருவதுடன், மாண வர்கள் விடுதியில் உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மாணவர்கள் ஆய்வு செய்வதற்கான நல்ல சூழலை உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.