states

சைலேந்திரபாபுவுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

சென்னை,ஜூலை 16- உண்மையை மறைத்து தமிழ் நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த காவலருக்கு ரூ. 2000 ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட அருணாச்சலம் என்பவர் 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த தாக கருதி பணி மூப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு அருணாச்சலம் மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலிக்க வில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அருணாச்ச லத்தின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது.  இந்த உத்தரவை அமல்படுத் தவில்லை என்று கூறி அரு ணாச்சலம் தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு மனுதார ரின் கோரிக்கையை டிஜிபி பரி சீலித்ததாகவும், பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கா மல் 11 ஆண்டுகள் கழித்து விண்ணப்பித்த காரணத்தால், மனு தாரர் நிராகரிக்கப்பட்டு விட்டதாக  தெரிவித்தார். இந்த தகவலை மறைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தவறான மனுவை தாக்கல் செய்ததற்காக இரண்டாம் நிலை காவலரான மனுதாரர் அருணா ச்சலத்திற்கு 2000 ரூபாய் அப ராதம் விதித்து, டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு எதிரான நீதிமன்ற அவ மதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த அபராத தொகையை தமிழ்நாடு காவல்துறை மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கவும் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.