states

img

புதுச்சேரிக்கு நிரந்தர துணைநிலை ஆளுநரை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசாணை எண் 48ஐ திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் காலை 7 மணிக்கே பணிக்கு வரச் சொல்லும் நடைமுறையை மாற்றி, பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என  வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஏப். 16) ஆற்காடு பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப்போராட்டத்திற்கு டி.சந்திரன் தலைமை தாங்கினார்.  சங்கத்தின் மாநிலச் செயலாளர் முத்து, மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, பொருளாளர் வெங்கடேசன், துணைத்தலைவர விஜயன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கோவலன், சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.