சென்னை,ஏப்.12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை(ஏப்.12) நேரமில்லாத நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாட்சி வி. ஜெயரா மன்,“தென்னை விவசாயம் தமிழ் நாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. அதிலும் பொள்ளாட்சி மாவட்டம் முதலிடமாகும். தற்போது கொப்பரை தேங்காய் விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ 120 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்” என்றார்.திமுக உறுப்பினர் அசோக்குமார், “பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் கஜா புயலின்போது முற்றிலும் தென்னை மரங்கள் அழிந்து விட்டது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்த விவசாயிகளுக்கு தற்போது கொப்பரை விலை வீழ்ச்சி மேலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார். இதற்கு பதில் அளித்த வேளாண் துறை அமைச்சர் உறுப்பினர்களின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்றார்.