தில்லியின் காற்றின் தரம் ஞாயிறன்று மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. சனி யன்று 255 புள்ளிகளாக இருந்த காற்றின் தரம், ஞாயிறன்று 359 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
நாட்டின் புகழ்பெற்ற எரிசக்தி பொறியிய லாளர் மற்றும் அறிவியல் ஊக்குவிப்பாள ரான ரோகினி காட்போல் (71) காலமானார்.
வழக்கறிஞர்கள் தங்களிடம் வேலை செய்ப வர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரி வித்துள்ளார்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள முக்கியமான 10 ஹோட்டல்களுக்கு ஞாயிறன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலில் 55 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.46 லட்சம்) வழங்கப்படவில்லை யெனில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று தெரி விக்கப்பட்டிருந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா ரயில் முனையத்தில் ஞாயிறன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்துள்ளனர். ரயில் நிலையத்தின் நடைமேடை 1-ல் காலை 5.56 மணிக்கு பாந்த்ரா - கோராக்பூர் விரைவு வண்டி வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.