சென்னை, ஜூன் 1- தமிழகத்தில் ‘தட்கல்’முறையில் பத்திரப்பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த ‘தட்கல்’ பத்திரப்பதிவு முறை செயல்படுத்தப் படவுள்ளது. தமிழக சட்டப் பேரவைக் கூட்ட த்தொடரின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதில் அளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவை விரைந்து மேற்கொள்ள வசதியாக ‘தட்கல்’ முறை கொண்டு வரப்படும் என்றார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரப்பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள அரசாணையில், “தட்கல்பத்திரப் பதிவு நடைமுறை முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படும். தினசரி அதிகளவில் பத்திரப்பதிவு நடை பெறும் 100 அலுவலகங்கள் இதற் காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 100 சார் பதிவாளர் அலுவல கங்களிலும், அதிகபட்சமாக தினசரி தலா 10 தட்கல் பத்திரப்பதிவுகள் செய்யப்படும். தட்கல் முறையில் பத்திரப்பதிவு செய்ய ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.