states

நடன இயக்குநர் சின்னா காலமானார்

சென்னை,ஜூன் 17- முந்தானை முடிச்சு, தூறல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தை போல, செந்தூர பாண்டி, நேசம்  உட்பட 200க்கும் மேற்பட்ட படங்க ளுக்கு நடன இயக்குநராக பணி யாற்றிய சின்னா வெள்ளி யன்று(ஜூன் 17) காலமானார். அவருக்கு வயது 69. தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு இப்படி பாக்யராஜ் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற படங்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர், சின்னா. 300 படங்களுக்கும் மேல்  நடனக் குழுவில் உதவியாளராக இருந்து நடன அமைப்புகளும் செய்துள்ளார். ஆந்திர மாநிலம், ஜங்கா  ரெட்டி கூடம், இவரது சொந்த ஊர். இவருடைய தந்தை ஹைத ராபாத்திலுள்ள இசைக்கல்லூரி யில் முதல்வராக இருந்தவர். பல  ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடைசி யாக சேஷூ மாஸ்டரிடம் உதவி யாளனாக சேர்ந்தார்.  இவரது திறமையை கவனித்த பாக்யராஜ் ‘’தூறல் நின்னு போச்சு’’ படத்தில் இவரைத்  தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம்  செய்து வைத்தார். பாக்யராஜ் சொந்தமாக தயாரித்த ‘தாவணிக் கனவுகள்’ படத்திற்கும் இவர் தான்  நடன இயக்குநர். இது போக ‘வாங்க மச்சான்  வாங்க’, ‘உன்னை விட மாட்டேன்’,  ஆர்.சுந்தர ராஜனின் இயக்கத் தில் ‘என்னைத் தெரிஞ்சா சொல்லா தீங்க’ போன்ற பல படங்களுக்கு  நடன இயக்குநராக இருந்துள் ளார். இவரது மறைவுக்கு திரைத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.