states

தண்ணீரில் மூழ்கிய 200 ஏக்கர் விவசாய நிலங்கள்

சிவகங்கை, நவ.6-  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா ஏனாதி கண்மாய் நிரம்பி சோமாச்சி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். சோமாச்சி கண்மாய் நிரம்பி ஓடைவழியாக தண்ணீர் வெளியேறும். இந்த ஓடையை சீரமை க்காததால் ஓடை வழியாக வெளி யேறும் தண்ணீர் வயலுக்குள் புகுந்தது.  இதனால்  200 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் நீலமேகம் ஆகியோர் பொதுப்பணி துறை அதிகாரிகள், வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக நீலமேகம் கூறுகை யில், இந்த ஓடை கடந்த 20 ஆண்டு காலமாக மேம்படுத்தப்படவில்லை. இதனால்  ஓடை வழியாக செல்கிற தண்ணீர் 200 ஏக்கருக்கு மேல் வயல் களை மூழ்கடித்துள்ளது.

பயிர்கள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற் பட்டுள்ளது என்றார்.  இவருடைய புகார்களை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரி கள், வட்டாட்சியர் ,கிராம நிர்வாக அலு வலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஓடையை சீரமைப்பதாக தெரி வித்துள்ளனர். சோமாச்சி கண்மாய் நிரம்பி  கண்ணாரிருப்பு கண்மாய்க்கு செல்லும். இக்கண்மாய் நிரம்பி ஓடை வழியாக பாப்பாகுடி கண்மா ய்க்கு தண்ணீர் செல்கிற சங்கிலி தொடர் இணைப்பாக ஓடைகளும் கால்வாய்களும் இருந்து வருகின்றன. இதனை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் இப்பகுதி விவசாயிகளின் தொடர் கோரிக்கையாக உள்ளது. ஓடையை உடனடியாக மேம்படுத்தி சோமாச்சி கண்மாய் தண்ணீரை கண்ணாரிருப்பு கண்மாய்க்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு  செய்ய  வேண்டும் என்று விவசாயிகள்  தரப்பில் நீலமேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.