காந்தி நகர்,ஜூன்7- எதற்கெடுத்தாலும் ‘குஜராத் மாடல்’ என்று மார்தட்டிக் கொள்ளும் பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலத்தில், தலித் சிறுவன் பந்தை எடுத்துப் போட்டதால் ஆத்திரம் அடைந்த சாதி ஆதிக்க வெறியர்கள் அந்த சிறுவனின் உறவினரது கட்டைவிரலை வெட்டிய கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத் தில் உள்ளது காகோஷி கிராமம். இந்த கிரா மத்திலுள்ள பள்ளி, விளையாட்டு மைதா னத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) ஒரே சமூகத்தைச் சார்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்து எல்லைக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த மற்றொரு சிறுவன் ஓடிச் சென்று அந்தப் பந்தை பவுண்ட ரிக்கு விடாமல் தடுத்துள்ளான். இந்த ஆட்டத்தை பட்டியலினத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அந்த நேரத்தில், எல்லைக்கோட்டை நெருங்கிய அந்த பந்தை பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் எடுத்துக் கொடுத்துள் ளான்.
இதனால் ஆத்திரமடைந்த பேட்டிங் செய்த சிறுவன்,”தலித் வகுப்பைச் சேர்ந்த நீ எப்படி நான் அடித்த பந்தைத் தொட லாம்” என்று தகராறு செய்துள்ளான். மேலும், சாதிய ரீதியாகவும் இழிவுபடுத்தி உள்ளான். பட்டியலினத்தைச் சேர்ந்த அந்த சிறுவன் அவமானம் தாங்க முடியாமல் கூனிக் குறுகி நிற்க, அந்த வழியாக சென்ற தலித் சிறுவனின் மாமா தீரஜ் பர்மர், இந்த சம்பவத்தை பார்த்துவிட்டார். உடனே சம்பவ இடத்திற்கு சென்றார். தலித் சிறுவனை அவமானப்படுத்திய ஆதிக்க சமூக சிறுவர்களை கண்டித்து விட்டு, பாதிக்கப்பட்ட சிறுவனை வீட்டு க்கு அழைத்துச் சென்று விட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்து பல மணி நேரம் கழித்து அன்றைய தினம் இரவு ஏழு பேர் கொண்ட ஒரு கும்பல், தீரஜ் வீட்டிற்குள் நுழைந்து கூரிய ஆயுதங்க ளைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கி யுள்ளது. அந்த கும்பலை தடுக்கச் சென்ற அவரது சகோதரர் கீர்த்தியையும் அந்த கும்பல் தாக்கியிருக்கிறது. அப்போது கீர்த்தி யின் கட்டைவிரலை துண்டாக வெட்டி விட்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இந்தத் தாக்குதலில் பலத்த காயம டைந்த கீர்த்தியை அங்கிருந்து அவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள் ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையிடமும் புகார் கொடுத்துள்ள னர். பல்வேறு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை இதுவரை ஒருவரை யும் கைது செய்யவில்லை. ஒரு பந்தை தலித் சிறுவன் தொட்டதற்காக அவரது உறவினரின் கட்ட விரலை வெட்டிய சம்ப வம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது.