சென்னை,ஏப்.23- ஆசிரியர், அரசு ஊழியர்கள் புதிதாக பணிக்கு சேரும்போது அவர்களது சான்றிதழ்களை சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உரிய ஏற்பாடு செய்யப்படும் என்போலி சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மாநாட்டில் அவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், நாட்டில் முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு விளங்க காரணம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்தில் முதலீட்டை ஈர்த்துள்ளது . இளை ஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய அரசாக இந்த அரசு இருக்கும். தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெறுவது குறித்து விழிப்புணர்வு தேவைப் படுகிறது. முதல் தலைமுறை தொழில் முனைவோர் கவனமுடன் செயல்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கொரோனா தொற்று மீண்டும் பரவுவதால் அரசு சொல்லும் வழி காட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை பின்பற்றும். பள்ளிகளில் மூர்க்கமாக செயல்படும் மாணவர்களும், நல்ல வர்கள் தான். அவர்களை இரண்டாவது அன்னையாக விளங்கக்கூடிய ஆசிரியர்கள் தான் திருத்த வேண்டும். அப்படிபட்ட மாணவர்களுக்கு பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுக ளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களின் தேவைக்கேற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும். அரசு அலுவலகங்களில் இருந்து அதிகப்படியான சான்றி தழ்கள் சரி பார்ப்புக்காக அனுப் பப்படுகிறது. அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்க ளிலேயே சான்றிதழ் சரி பார்ப் பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்றார்.